- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இதஜ சேப்பாக்கம் கிளை சார்பாக 20 நாட்களில் திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி!
இன்ஷா அல்லாஹ் வரும் ரமதான் பிறை பத்தில் இருந்து முப்பது வரை இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் “இருபது நாட்களில் இறை வேதம் கற்கலாம்” எனும் முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஓத தெரியாதவர்களும், ஓதி மறந்தவர்களும் பங்கேற்று ரமதானை பயனுள்ளதாக்கலாம். உடனே முந்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து பத்து நன்மையை பெற்று தரும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து இம்மை மறுமை வெற்றியை பெறலாம்.
»
நாச்சியார் கோவிலில் மக்களை அழைக்கிறது... மாமறை அழைக்கிறது...!!
திருச்சியில் இதஜவின் சுதந்தின தின பொதுக் கூட்டம்!
திருச்சியில் இதஜ சார்பாக ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள்!
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி கிளை சார்பாக ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தினமும் இஃப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில் இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் . முன்னதாக நடைபெற்ற மாவட்ட பொது குழுவிலும் கலந்து கொண்டார்.
இதஜ ஆர்ப்பாட்ட எதிரொலி! அப்பாவி ஆலிம் மற்றும் இளம் பெண் விடுதலை!
அல்ஹம்துலில்லாஹ்!
அப்பாவி ஆலிம் ஒருவரையும், இளம் பெண் ஒருவரையும் அடைத்து வைத்து அழிச்சாட்டியம் செய்த வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் அறிவிப்பை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள், நம் நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை எனும் பெயரில் கைது செய்யப் பட்டிருந்த பள்ளி இமாம் மற்றும் அப்பாவி பெண்மணி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
எல்லா புகழும் வல்ல இறைவன் ஒருவனுக்கே!
பிஜே அவர்களின் முடிவு!
6 மாதங்களுக்கு இனிமேல் மார்க்க பணிகள் மட்டுமே தம்மால் செய்யப்டும் என்று அண்ணன் பிஜே ஆன்லைனில் அறிவித்துள்து மகிழ்ச்சியான விடயம். மார்க்கப் பணி மட்டும் என்பதன் மூலம் தனி நபர் விமர்சனம் எனும் தரங்கெட்ட வேலையையும் அண்ணன் 6 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் என்பது புலன் ஆகிறது.
ஆயுள் காலம் முழுவதும் எடுத்து இருக்க வேண்டிய முடிவை வெறும் 6 மாதம் எடுத்துள்ளதன் மூலம் மகிழ்ச்சிக்கு மத்தியிலும் ஒரு சிறிய கவலையை கொள்கை உள்ளங்களுக்கு தருகிறது.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.
தவ்ஹீத் என்ற போர்வையில் இத்தனை அசிங்கம் தாங்கிய ஆலிம்களா..!?
மனிதம் செத்த இந்திய தலைநகர்!
இன்று நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி நம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. பிஹாரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வேதனையில் துடியாய் துடித்துள்ளார். அப்பாதையை கடந்த சென்ற எந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று விட்டு வேதனை தாளாமல் இறந்தே போனார்.
புதிய உலகம் காண புறப்பட்டு வந்த மகவின் அழுக்குரல் கேட்டும் யாரும் வரவில்லை. வேதனையில் அழுது அழுது இறந்த போன தாய் ஒருபுறமும் பிறந்த சில மணித்துளிகளில் பசியால் துடித்த மகவு மறுப்புறம்.


