அமீரக கிளை சார்பாக தொழில் உதவி!
கோவையைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற சகோதரர் சொந்தமாக தொழில் செய்வதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பாக்கர் அவர்கள் மூலம். கீழக்கரை கிளையை தொடர்பு கொண்டார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கிளை சார்பாக ரூபாய் 15000 அதன் ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் மூலம் அனுப்பப்பட்டு. இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் அவர்களால் வழங்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் நபி வழி திருமணம்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-03-2010 ஞாயிறு காலை 12 மணியளவில் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரியை சார்ந்த சகோதரர் ஜைனுல்ஆபிதீன் அவர்களுக்கு, நபி வழித் திருமணம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தலைமையகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
தகவல் : ரஹ்மதுல்லாஹ்
சிகரத்தை நோக்கி........(மாணவர்களுக்கான நிகழ்ச்சி)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பில் கடந்த 27-03-2010 அன்று சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் மாணவ சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.
தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு.
தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 28-03-2010 அன்று எம்.எம்.டி.ஏ. காலனி பஸ் டிப்போ அருகில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஏ.எம். இனாயத்துல்லாஹ், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஸையது, எம்.எம்.டி.ஏ. ஜாஹிர் மற்றும் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்
இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு!
ஹஜ் பயணம்: சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை - ஐஎன்டிஜே கோரிக்கை
துல்ஹஜ் மாதம் ஹஜ் புனித யாத்திரை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுக்காண்டு பல லட்சம் மக்கள் மக்காவில் கூடி தங்கள் புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் பயணிகளை பராமரிப்பதற்கும், அவர்களுக்கு உரிய வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கும் ஸவூதி அரேபிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதக் கேளுங்க!
நாத்திகவாதியாக இருந்த பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்று சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்துத்துவ, நாத்தீக அமைப்புகளுக்கு சவால் விடும் வகையில் பாக்கர், மக்காப் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பேச்சும், வளைகுடா மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
முத்தாரம் இதழ் மறுப்பு தெரிவித்தது.
29.3.2010 வெளியான முத்தாரம் வார இதழில் “மிஸ்டர் மனிதன்” என்ற கட்டுரையில் கண்ணியமிக்க இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய கட்டுரையில் அவர்களது உருவப்படத்தை வெளியிட்டு இருந்தனர். இதனால் இஸ்லாமிய சமூகத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான அப்பத்திரிக்கை நிர்வாகத்தை வன்மையாக கண்டித்த நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வந்து நடந்த தவறுக்கு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டனர் அதன் ஆசிரியர் கோசல்ராமும் அவரது நிர்வாகத்தினரும்.
அரபு உலகின் செல்வாக்கு பெற்றவர்கள் பட்டியலில் துபை காவல்துறை தலைவர்!
துபை காவல்துறை தலைவரான தாஹி கல்ஃபான் தமீம் அரபு உலகின் மிகவும் செல்வாக்குப் பெற்ற நபர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அரேபியன் பிஸினஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நபர்களில் தமீம் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஹமாஸ் போராளியான மஹ்மூத் அல் மப்ஹுஹ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை கண்டறிவதிலும், அதனை உலகிற்கு அளிப்பதிலும் காட்டிய துணிச்சலே கல்ஃபான் தமீமை அரபு உலகின் செல்வாக்கு பெற்ற நபராக உயர்த்தியுள்ளது.


