INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,204
  • Visitors:
  • Today: 12
    This week: 308

February 2010

பசிபிக் பெருங்கடலில் சுனாமியால் சிலி முதல் ஜப்பான் வரை பாதிப்பு

 தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தின் எதிரொலியாக நேற்று சிலி நாட்டுத் தீவை தாக்கிய சுனாமி அலைகள் இன்று (28.02.2010) ஜப்பானைத் தாக்கின.

சிலியின், கன்செப்சியான் நகருக்கு அருகே, தென் பசிபிக் பெருங்கடலில், 22 மைல் ஆழத்திற்கு நேற்று அதிகாலையில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.8 ரிக்டராக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மிக மிக சக்தி வாய்ந்த பூகம்பம் என்பதால் சிலியே குலுங்கிப் போய் விட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு தினமான பிப்-28அன்று தமிழகமெங்கும் இரத்த தானம் நிகழ்ச்சி

ஏக இறையின் இறுதி வேதம் கூறுகிறது: கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்க்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்'என்றும்,'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவர்'என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். (அல்குர்ஆன் 5 : 32) 

பெரியகுளத்தில் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி

கடந்த 14-02-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பாக முஸ்லிம் அல்லாத பிற சமய மக்களுக்கு மனித குலத்திற்குச் சொந்தமான உலகப் பொது மறையாம் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி பெரியகுளம் வெங்கடாசலபதி மண்டபத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

திருமணப் பதிவுச் சட்டமும் - திமுக பொதுக் குழு தீர்மானமும்!

கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றவழிகாட்டுதல் எனும் பெயரில் நாட்டில் நடைபெறும் அனைத்து திரமணங்களைப் பதிவு செய்திட சட்ட முன் வடிவு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட உடனúயே அதன் அறிமுக நிலையிலயே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதனை கடுமையாக எதிர்த்தது.

மேலும் அதற்கென சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஒரு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியது. அதுமட்டுமின்றி இந்தச் சட்டத்தின் விளைவுகளையும், பொது சிவில் சட்டத்திற்கான முன்னோட்டம் என்பதையும், அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும் மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் எழுதிய விளக்கக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் இறைவன் தந்த வெற்றி

கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்துத் தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப்பதற்காக எல்லா அமைப்பையும் சார்ந்த  கீழ்க்காணும் தலைவர்களை ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டையை தொடர்ந்து கலவர பூமியாக மாற்ற பிஜேபி கும்பல் கங்கணம்!

முத்துப்பேட்டையில் மீண்டும் மதக்கலவரத்தை தூண்டச் சதி - விழித்துக் கொள்ளுமா காவல்துறை?

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் தொடர்ந்து இந்துத் துவாவினர் மதக்கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களின் சொத் துக்களை சூறையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விநாயகர் ஊர்வலங்களை கலவரத்திற்குக் காரணியாகப் பயன்படுத்தி வந்தனர்.

முஸ்லிம்கள் வாழும் குறுகலான தெருக்களில் பல பள்ளிவாசல்களைக் கடந்து செல்லும் வகையில் ஊர்வலப் பாதை அமைந்து இருப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவது திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது.

குவைத் மண்டலம் சார்பாக ரூ.25 ஆயிரம் மருத்துவ உதவி!

கடந்த 19 02 2010 அன்று மாலை 7  மணியளவில் இதஜ குவைத் மண்டலம் சர்ர்பாக மிர்கப் பகுதியில்   கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம் சமுதாய்திற்கு ஏற்படும் பாதகங்களை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது.

மாரடைப்பை உண்டாக்கும் சர்க்கரை நோய் மாத்திரைக்கு தடை!

நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது அவந்தியா என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் : விடுதலை.

 

ஸவுதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு...

அன்பின் நெஞ்சங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
 
ஸவூதிஅரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்;
 
உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?

உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?

உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?

உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?

மொராக்கோவில் மசூதி இடிந்து 41 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பள்ளிவாசல் கோபுரம் இடிந்து விழுந்ததில் 41 பேர் பலியாகினர். 76 பேர் காயமடைந்தனர்.

INTJ திரட்டி

Syndicate content