டிஸம்பர் 6 தமிழகம் முழுவதும் இதஜா சார்பாக ஆர்பாட்டம்,
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் டிஸம்பர் 6ஆம் தேதி அன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்.
அதில் சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகை இடவும், மற்ற மாவட்டங்களில் மத்திய அலுவலங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் இதோ
தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெருநாள் தொழுகை மற்றும் குர்பான் விநியோகம்
கீழக்கரை:
கீழக்கரையில் நபிவழி பெருநாள் தொழுகை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது. அதையடுத்து குர்பான் பிராணிகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சி விநியோகம் வழங்கப்பட்டது.
கே.ஈ.சி.டி திடலில் காலை 7.30 மணிக்கு மவ்லவி நிழாமுதீன் அஷ்ரஃபி பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேரூரை நடத்தினார். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்களும், ஆண்களை விட அதிக அளவில் பெண்களும் கலந்து கொண்டனர்.
எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!
தமிழகம் முழுவதும் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள்
மதுரையில் தெரு முனைப் பிரச்சாரம்
22.11.2009 ஞாயிறு மாலை மதுரை வில்லாபுரம் ஹவுஸிங்க் போர்டு கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம் நடபெற்றது .
மாவட்ட தலைவர் ..அப்துல் காதர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் ஜாபர் மற்றும் மாவட்ட பேச்சாளர் நவாப்ஜான் மதுரை முபாரக் பள்ளி இமாம் ஷபீர் அஹ்மது ஆகியோர் சிறப்புரையற்றினர். கிளை தலைவர். ஷாஹுல் நன்றியுரையாற்றினர்.
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.
கீழக்கரையில் தெரு முனைக் கூட்டம்
கீழக்கரை புதுத்தெருவில் கடந்த 21-11-09 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது 'குர்ஆன் கூறும் உபதேசம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், கீழக்கரை நகர் தலைவர் கண்மணி சீனி, நியாஸ், ஹாஜா அணீஸ் உடபட ஆண்களும், பெண்களும் கடும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
-------------------------------------------------------------------------------
கோவையில் மக்களை அழைக்கின்றது மாமறை குர்ஆன்,
சென்ற 17-11-2009 அன்று கோவை மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மக்களை அழைக்கின்றது மாமறை குர்ஆன் என்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர், பொதுச் செயலாளர் ஸித்தீக், பொருளாளர் ஸெய்யது அபூபக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் காஞ்சி ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
சேலம் மாவட்டத்தில் இதஜா கிளை புதிய உதயம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சேலம் மாவட்ட அமைப்பு புதிதாக துவங்கப்பட்டது.

கடந்த 22ந் தேதி சேலம் யானைகால் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அமைப்பு துவக்க நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் தொண்டியப்பா ஆகியோர் கலந்து கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
தேனி மாவட்டத்தில் தர்பியா முகாம்
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம் சார்பாக கடந்த 13-11-09 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த தர்பியா முகாமில் ""இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி'' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளை அவர் நடத்தினார்.
மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் உட்பட மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------
மதுரையில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 15-11-09 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது.
மக்ஃரீப் முதல் இஷா வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அழைப்பாளர் ஷம்ஸுத்தீன் இஸ்திகாமத் (உறுதியான நம்பிக்கை) என்ற தலைப்பில் மிகச் சிறப்பான விளக்கங்களை அளித்தார். அவரது உரை ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு நல்லதொரு புத்துணர்ச்சியை அளித்தது. மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
-------------------------------------------------------------------------------

