INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,204
  • Visitors:
  • Today: 12
    This week: 308

ஜெரூசலத்தை மீட்பதற்காய் அரபு, இஸ்லாமிய நாடுகள் பெருமளவு நிதியுதவியளிக்க முன்வரவேண்டும்: ஜமால் அல் குத்ரி

ஜமால் அல் குத்ரி காஸா – இஸ்லாமியப் புனிதத் தலமான ஜெரூசலத்தில் ஸியோனிஸ சதித்திட்டங்களை முறியடித்து, அங்குள்ள மண்ணின் மைந்தர்களின் இருப்பை உறுதிப்படுத்துமுகமாக  பெருமளவு நிதியுதவிகளை வழங்க முன்வருமாறு அரபு-இஸ்லாமிய நாடுகளை நோக்கி, முற்றுகைக்கு எதிரான மக்கள்சபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜமால் அல் குத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.12.2009) ஜெரூசலத்துக்கு ஆதரவளிக்குமுகமாக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தீவிர ஸியோனிஸமயமாக்கல் திட்டத்தின் மிகப் பிரதான இலக்காகப்  புனித ஜெரூசல நகரம் அமைந்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.

அந்த இலக்கினை அடைவதற்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை எந்த எல்லைக்கும் போகத் தயங்காது என்று அவர் அறிவுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸியோனிஸ அத்துமீறல் ஆக்கிரமிப்பிலிருந்து ஜெரூசலத்தைப் பாதுகாப்பதற்காய் அரபு, இஸ்லாமிய, சர்வதேச மட்டத்தில் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினார்.

ஜமால் அல் குத்ரி அவர்கள் ஜெரூசலத்தையும் மஸ்ஜித் அல் அக்ஸாவையும்  ஸியோனிஸமயமாக்கலில் இருந்து பாதுகாக்குமுகமாக பல்வேறு அமைதிப் பேரணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: PIC

INTJ திரட்டி

Syndicate content