- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் !
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தின் பொதுக் குழு இன்று 11.12.11 அன்று மாநிலத் தலைமையகத்தில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் காஜா கரிமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில்
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிரிஷ்ணாம்பேட்டை, சூளைமேடு , சைதாபேட்டை எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி, மடுவின்கரை ஆசாத் நகர், அமிஞ்சிக் கரை, MMDA உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தலைமை நிர்வாகிகள் , எஸ்,எம்,பாக்கர் , தொண்டியப்பா , அப்துல் ஹமீது, செங்கிஸ்கான் இணையதுல்லாஹ், முஹம்மது மைதீன், கலிமுல்லாஹ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
வரும் 25.12.11 அன்று தமிழகம் முழுதும் நடைபெற உள்ள சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்களை தென் சென்னைக் கிளைகள் எங்கும் நடத்துவது, தஃவா உடைய வேலைகளை முடுக்குவது, தர்பியாக்களை கிளைகள் தோறும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டன. மாவட்ட நிர்வாகத்தை மறு சீரமைத்து தேர்தல் நடத்தப் பட்டு கீழ்க் கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கப் பட்டனர்.
புதிய நிர்வாகிகள் :
தலைவர் : யூனுஸ் பாஷா
துணை தலைவர்: சிக்கந்தர்
செயலாளர் : யூசுப்
துணை செயலர்கள்: சம்சுதீன் , சேட் , JM.கனி
பொருளாளர்: பயாஸ் அஹமத்
தொண்டர் அணி: செய்யது
வர்த்தக அணி : சுல்த்தான்.
மாணவர் அணி : நசிர் அஹ்மத்
மருத்துவ அணி : கலீல் அஹ்மத்
கோவை மாவட்ட செயற்குழு.
கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பகுதி ஜி.எம் நகரில் சென்ற (12.12.2010) ஞாயிறன்று மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைப் பெற்றது.

மாவட்டச் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் அபூபக்கர் (எ) தொண்டியப்பா, மாநிலச் செயலாளர் கோவை ஜஅஃபர், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மிக உற்சாகத்துடன் காலை 10 மணிக்கு துவங்கிய பொதுக்குழுவில் மாவட்டச் செயல்பாடுகளை எவ்வாறு முடுக்கி விடுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்ன? என ஆலோசனை செய்யப்பட்டது.
மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் கடந்த மாத செயல்பாடுகளை விவரித்தார். முன்னதாக அப்துல் காதர் மன்பஈ, பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ன என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அழகிய உரை ஒன்றை நடத்தினர்.
கோவை மாநகர், கவுண்டம் பாளையம், குனிசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய மண்டலங்களில் இருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டியப்பா, தற்பொழுது அமைப்பின் பெயர் சம்பந்தமான வழக்குகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கோவை ஜஅஃபர், எதிர்காலத்தில் மாவட்ட செயல்பாடுகளை எப்படி செயல்படுத்துவது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக நபிவழிப்படி ஜி.எம் நகர் கிளை பொறுப்பாளர் அப்துல் மனாஃப் அவர்களுக்கு தொண்டியப்பா தலைமையில் திருமணம் நடத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளர் உமர் ஃபாரூக், மாவட்டத் துணைத் தலைவர் நாசர் உள்ளிட்ட சகோதரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்து இருந்தனர்.
தென் சென்னை மாவட்டப் பொதுக்குழு.
சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி மர்கஸில் நேற்று (21.11.2010) ஞாயிறன்று நடைப் பெற்றது.
பொதுக்குழுவில் கடந்த 22 மாத காலம் செய்த செயல்பாடுகளை அலசி ஆராயப்பட்டன. தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் கிளை நிர்வாகிகள் தங்கள் கிளை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார்கள் .
இதஜவில் தற்போது பிஜெயின் பித்தலாட்டத்தால் நிகழ்ந்த பெயர் அபகரிப்பு பற்றி மாநில செயலாளர் செங்கிஸ்கான் விரிவாக எடுத்துரைத்து 'கொள்கை சகோதரர்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் பிஜெயின் பித்தலாட்டத்தை மாநில நிர்வாகம் சட்ட ரீதியாக அணுகிக் கொண்டு இருப்பதை எடுத்து கூறினார்.
ஆகவே, நீங்கள் த,த .ஜ. மாவட்ட கிளை நிர்வாகிகள் வரம்பு மீறி, நமது பெயரில் போஸ்டர் .ஓட்டினாலோ அல்லது நம் போஸ்டரை கிழித்தாலோ பொறுமையை கையாண்டு நிதானத்தை கடைபிடியுங்கள் விரைவில் இப்பிரச்சனைக்கு அல்லாஹ்வின் உதவியால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார் .
மேலும் சிறப்பு அழைப்பாளராக முன்னால் த.த.ஜ. துபை மண்டலத் தலைவர் அதிரை ஜமால், மக்கள் ரிப்போர்ட் பற்றி எடுத்துரைக்கும் பொது ஆரம்ப காலங்களில் உணர்வு பத்திரிக்கையை பள்ளி வாயில்களில் நின்று விற்றதை நினைவு கூர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.
பெருளாளர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீத், மூத்த சகோதரர் கோவை ஜஃஅஃபர், . மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் கலிமுல்லாஹ் உள்ளட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இறுதியில் நிர்வாக தேர்தல் நடை பெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். மாநில செயலாளர் இணையதுல்லாஹ்வை மாவட்ட நிர்வாகத்திற்கு தந்தால் பணிகளை செம்மையுடன் துரிதப்படத்தலாம் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இனயாதுல்லாஹ் மாவட்ட நிர்வாகத்திற்கு மாற்றப் பட்டார். மாவட்டப் பொறுப்பில் இனாயதுல்லாஹ் இருந்தாலும் தாஈக்களின் பொறுப்பை கவனித்து வருவதால் மாநில நிர்வாக குழு கூட்டங்களிலும் கலந்து கொள்வர் என முடிவெடுக்கப்பட்டது.
கீழ்காணும் சகோதரர்கள் புதிய பொறுப்பு தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : இனாயத்துல்லாஹ்
செயலாளர் : காஜா கரிமுல்லாஹ்
பொருளாளர் : மடுவை சாகுல் ,
துணைத் தலைவர் : யூனுஸ் பாஷா
துணைச் செயலாளர்கள் : பயாஸ், முன்ஸு கனி வர்த்தக அணி : ஆஸாத் நகர் ஸேட்
தொண்டரணி : எம்.எம்.டி.எ.ஸெய்யத்
மருத்துவ அணி : கிருஷ்ணம் பேட்டை காஜா
இராமநாதபுரம் மாவட்டப் பொதுக்குழு:
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பொதுக்குழு, இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் 23-04-2010 வெள்ளிக் கிழமை மாலை4.00 மணி அளவில் மாவட்ட தலைவர் முஸ்ஸமில்ஹார் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஐ.என்.டி.ஜே மாவட்டச் செயலாளர் ஹஸன் அலி, மாவட்டப் பொருளாளர் ஹாஜா மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பேச்சாளர் நிழாமுதீன் அஷ்ரஃபி ஆலிம் “இறையச்சம்” தலைப்பில் மிக உருக்கமாக உரையாற்றினார். பின்னர் மாநில செயலாளர் செங்கிஸ்கான் பொதுகுழுவை மேற்பார்வையிட்டு வழி நடத்தினார். இதில் இராமநாதபுரம் மாவட்டதிலிருந்தும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழுவில் மாவட்ட துணைத் தலைவராக சிக்கல் ஸிராஜ்தீனும், மாவட்டச் துணைச் செயலாளர் ரைஸ் அஹமதும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன் பிறகு மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானங்கள் பின்வருமாறு நிறைவேற்றப்பட்டன:
1. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு மத்தியில் 15% இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கோருகிறது. இதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் விரைவில் நடத்தும் எனத் தெரிவிக்கிறது.
2. மத்திய அரசு ஹஜ் பிரயாணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் உணவும் வழங்க வேண்டும் என பொதுக்குழு வழிறுத்துகிறது.
3. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பகலிலும் இரவிலும் தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது மின்வாரியம் அறிவித்த நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு தொடர்கிறது இதனை உடனே சரி செய்து சீராக வழங்கும்படி இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
4. இராமநாதபுரம் கீழக்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தகவல் : கீழை அப்பாஸ்.


