- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. நெல்லையில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். மதுரையில் கர்ப்பினிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
கோவையில் பன்றி காய்ச்சலில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்து விட்டது. இதில் மூன்று வயது குழந்தையும் உண்டு என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
கோவையைப் போன்று கேரள எல்லையோர மாவட்டங்களான மதுரை மற்றும் நெல்லை பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நெல்லை மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்காமல் வெறும் குளுகோஸ் மற்றுமே ஏற்றுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலுக்கு போதிய மருந்துகள் கைவசம் உள்ளதாக கோவை மாவட்ட மருத்துவக் கண்கானிப்பாளர் மதிவாணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால் நெல்லையில் மருந்துகள் இல்லாத நிலையை நோயாளி ஒருவரே பட்டவர்த்தனாமாக தெரிவித்திருக்கிறார். மாநில சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் உரிய விளக்கம் அளிப்பாரா என்பதே பொது மக்களின் எதிபார்ப்பாக உள்ளது.
பன்றிக்காய்ச்சல் என்ற பயமோ பீதியோ வேண்டாம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!
பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்காக பொதுவாக நாம் கடைபிடிக்க வேண்டியவை என சில முக்கிய குறிப்பகளை அது பட விளக்கத்துடன் வெளியிட்டுள்ளது.
தகவல் : நூருல் அமீன், நாச்சியார் கோவில்


