INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெருநாள் தொழுகை மற்றும் குர்பான் விநியோகம்

கீழக்கரை:

கீழக்கரையில் நபிவழி பெருநாள் தொழுகை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது. அதையடுத்து  குர்பான் பிராணிகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சி விநியோகம்  வழங்கப்பட்டது.

கே.ஈ.சி.டி திடலில் காலை 7.30 மணிக்கு மவ்லவி நிழாமுதீன் அஷ்ரஃபி பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேரூரை நடத்தினார். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்களும், ஆண்களை விட அதிக அளவில் பெண்களும் கலந்து கொண்டனர்.

5 ஆடுகளும், 5 மாடுகளும், 1 ஒட்டகமும் முறையாக அறுத்து விநியோகிக்கப்பட்டது.

இதில் மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ் கலந்து கொண்டார். இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் ஹாஜா, ஹாஜா அணீஸ், கண்மணி சீனி, நியாஸ் உள்ளிட்டவர்கள் சிறப்பான ஏற்பாட்டி்னைச் செய்திருந்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம்:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக திடலில் பெருநாள் தொழுகையும், அதையடுத்து கூட்டுக்குர்பானி நாச்சியார்கோவிலில் நடைபெற்றது.  குத்பா பேரூரை ரஹ்மதுல்லாஹ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

5  மாடுகள் கூட்டுக்குர்பானியாக கொடுக்கப்பட்டு ஏழை முஸ்லிம்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

INTJ திரட்டி

Syndicate content