சென்ற 17-11-2009 அன்று கோவை மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மக்களை அழைக்கின்றது மாமறை குர்ஆன் என்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர், பொதுச் செயலாளர் ஸித்தீக், பொருளாளர் ஸெய்யது அபூபக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் காஞ்சி ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மாநில நிர்வாகிகள் பாக்கர், ஸித்தீக் மற்றும் அபூபக்கர் ஆகியோர் ஆற்றிய சிறப்புரை கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை கோவை மாவட்ட நிர்வாகிகள், அதன் தலைவர் நாஸர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.
வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும், புகழ்ச்சியும். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


