இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சேலம் மாவட்ட அமைப்பு புதிதாக துவங்கப்பட்டது.

கடந்த 22ந் தேதி சேலம் யானைகால் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அமைப்பு துவக்க நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் தொண்டியப்பா ஆகியோர் கலந்து கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கெண்ட இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். இறுதியில் சேலம் மாவட்டத்தின் சார்பாக எதிர்வரும் டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் இருக்கும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்றும், பாபர் மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட ஐஎன்டிஜே நிர்வாகிகளாக கீழ்க் கண்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.
தலைவர்: பி. முஹம்மது ஹுஸைன், செயலாளர்: எம். பக்கீர் ஒளி, பொருளாளர்: இ கே.ஏ. சிராஜுதீன், துணைத் தலைவர்: பி. இமாம்தீன், துணைச் செயலாளர்: ஏ.சையது முஸ்தஃபா.
----------------------------------------------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


