- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்றைக்கு காசுதான் பிரதானம். மற்றவை சர்வசாதரணம் என்ற எண்ணுடத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில், என்ன திறமை இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் இன்றைய காலத்தில், அதிலும் ஒரு முஸ்லிம் தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இளைஞன் யூஸுஃப் பதான், மதுபானம் தொடர்பான விளம்பர "லோகோ' அணிவதில்லை என்று துணிச்சலாக முடிவு எடுத்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி மட்டை பந்து வீரர் யூஸுஃப் பதான். தற்போது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதம் அடித்த பெருமைமிக்க இவர், மதுபானம் தொடர்பான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதற்கேற்ப டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது சட்டையில் இருந்த "கிங்பிஷர்' நிறுவன "லோகோவை' துணியால் மறைத்து களமிறங்கினார். "கிங்பிஷர்' நிறுவனம் "பீர்' போன்ற மதுபானங்களை தயாரித்த போதும், கிரிக்கெட்டிலும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு அணிகளுக்கு "ஸ்பான்சராக' உள்ளது. தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது.
இந்நிலையில் அணியின் மற்ற வீரர்கள் "கிங்பிஷர்' லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது குறித்து யூசுப் கூறுகையில்,""கிங்பிஷர் என்பது மதுபான வகையை சேர்ந்தது. இதனை உட்கொள்வதோ அல்லது அதற்காக விளம்பரம் செய்வதோ எனது மதநம்பிக்கைக்கு எதிரானது,''என்றார்.
இது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""யூசுப் சிறப்பாக ஆடி வருகிறார். "லோகோ' தொடர்பான இவரது முடிவு பெரிய விஷயம் இல்லை. இதற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காது,''என்றார்.
கிரிக்கெட் அரங்கில், இதற்கு முன் தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா "கேசில் லேகர்' என்ற மதுபானத்தின் "லோகோவை' சட்டையில் அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் அனுமதி அளித்தது. இவரது வழியில் யூசுப் பதானும் மதுவுக்கு எதிரான தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்.
நன்றி : தினமலர்
தகவல் : பரக்கத் அலி, அபூதாபி.


