- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நாத்திகவாதியாக இருந்த பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்று சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்துத்துவ, நாத்தீக அமைப்புகளுக்கு சவால் விடும் வகையில் பாக்கர், மக்காப் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பேச்சும், வளைகுடா மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது கண்டு பொறுக்க முடியாதவர்கள் "பெரியார்தாசன் எதற்காக இஸ்லாத்தில் இணைந்தார் என்று தெரியவில்லை. ஆதலால் அவரை நாம் கண்காணித்துக் கொண்டி ருக்கிறோம். அதுவரையும் அவரை நமது மேடையில் ஏற்ற மாட்டோம்'' என்று ஆன்லைனில் கூறியிருப்பது மிகவும் வேதனையான விஷயம். ஏனெனில் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கி றோம் என்ற வார்த்தையை பெரியார் திராவிடர் கழக ராம கிருஷ் ணன் மற்றும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ஆகிய இருவரும் கூறியுள்ள அதே வார்த்தையாகும்.
அதே பாணியில் இவரும் கூறியுள்ளது கலிமாவை மொழிந்து, இஸ்லாத்தை ஏற்ற ஒருவனின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலாகும் என்பதை ஏன் இவர்கள் மறந்தார்கள் என தெரியவில்லை.
மேலும் நக்கீரன் விஷயத்தில் கடந்த முறை நபிகள் நாயகத்தை சம்பந்தப்படுத்தி செய்தி வெளி யிட்டபோது, மதுரை ஆதீனத்திடம் மன்னிப்புக் கேட்டுப்ப பெற்ற இவர்கள் அதே பாணியில் நித்யானந்தாவை விட்டு விட்டு "முதல் நாளே மன்னிப்பு கேட்ட நக்கீரனை எங்கள் அலுவலகத்தில் வந்து கேட்டால் தான் மன்னிப்போம்'' என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டது அவர்களுக்கு மத்தியிலேயே கேள்வியை எழுப்பியுள்ளது.
முற்றுகை முடிந்து மறுநாள் அல்ஹம்துலில்லாஹ்! நக்கீரன் வருத்தம் தெரிவித்தது என எஸ். எம்.எஸ். அனுப்பியதுதான் காமெடி. இவ்வளவு வாய் வீரம் பேசும் இவர் கள் தங்கள் உணர்வை இனி நக்கீரன் அலுவலகத்தில் அச்சிடாமல் இருப்பார்களா? என்றும், முதல் நாளே மன்னிப்புக் கேட்ட நிலையில் நக்கீ ரன் அலுவலக முற்றுகையால் எந்த ரியாக்ஷனும் இல்லை என்பதாக நக்கீரன் நிர்வாகம் விளம்பரத்திற் காக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடர வழக்கறிஞர்களை கலந்தாலோசிப்பதாகவும் கேள்வி!
எல்லாம் அறிந்த அல்லாஹ்வே இவர்களது செயல்பாட்டிற்கு போதுமானவன்.


