- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

துருக்கியில் 08.03.2010 (திங்கள்கிழமை) ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் 57 பேர் பலியாகினர்.
துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள இலாசிக் என்ற இடத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இதில் அங்குள்ள 6 கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தன. வீடுகள், மசூதிகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அரசின் பேரிடர் உதவிமையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கம் அதிகாலை 4.32 மணி அளவில் ஏற்பட்டதால் பெரும்பாலானோர் தூக்கத்திலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளது. அடுத்தடுத்து 30 முறை ஏற்பட்ட தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டன என இஸ்தான்புல்லிலுள்ள நில நடுக்க ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் கிராமங்களிலுள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிர்வாக அதிகாரி கூறுகையில், இங்கு ஒரு வீடு மீதியில்லாமல் அனைத்தும் இடிந்து தரை மட்டமாகி யுள்ளன. இதனால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார். இந்த கிராமங்களில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என இலாசிக் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
நன்றி : தினமணி.


