.jpg)
பிப்ரவரி 28ஆம் தேதியை உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகமெங்கும் இரத்த தானம் செய்ய முடிவு செய்தது. அதன் கீழக்கரை கிளை கீழக்கரை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாமை மிகச் சிறப்பாக நடத்தியது.
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை நகர் தலைவர் சீனி ஜஹ்ஃபர் தலைமை வகித்தார். புதுவை மாநிலத் தலைவர் ஜஃபர், மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் மாவட்டச் செயலாளர் ஹஸன் அலி, மாவட்ட பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸின் துவக்க உரையுடன் இரத்த தான முகாமை கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பஷீர் அஹமது துவக்கி வைத்தார். இம் முகாமில் பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் இரத்தத்தை தானமாக வழங்கினர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர் வேலுசாமி இரத்த வங்கி குழுவினர் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆண்களுக்கு சமமாக பெண்களும் இரத்தம் வழங்கினர்.


