கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்துத் தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப்பதற்காக எல்லா அமைப்பையும் சார்ந்த கீழ்க்காணும் தலைவர்களை ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. பேரா. கே.எம். காதர் மொய்தீன்
2. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
3. எம்.ஐ. முஹம்மத் முனீர்
4. எஸ்.என். சிக்கந்தர்
5. மௌலவி டாக்டர் அன்வர் பாதுஷா உலவி
6. எம். பஷீர் அஹமது
7. மௌலவி இல்யாஸ் ரியாஜி
8. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிநாதன்
9. முஹம்மது ஹனீபா
17.02.2010 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனீபா அறிவித்துள்ளார்.
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று முஸ்லிம்களையும், உலமா பெருமக்களையும், முஹல்லா ஜமாஅத்துகளையும், முஸ்லிம் இயக்கங்களையும் ஒத்த கருத்திற்கு கொண்டு வர அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்திற்கு ஒரு துயரம் என்றால் முதல் பேரணியாக களத்தில் நிற்பது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தான்.
இறைவனின் பொருத்தத்தை பெறும் ஒரே நோக்கத்திற்காக இஹ்லாஸுடன் செயல்பட்டதற்கு இறைவன் தொடர்ந்து வெற்றிகளை தந்து கொண்டுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹு அக்பர்.


