கடந்த 26.01.2010.அன்று சேலம் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் சேலம் SKS மருத்துவ மனையும் இணைந்து பொது மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது.

இம் முகாமில் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கெண்டு பயன் பெற்றனர். இந் நிகழ்விற்கு சேலம் மாவட்ட தலைவர் .முஹம்மத் ஹுஸைன் அவர்கள் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் எம். பக்கிர் ஒலி அவர்கள் வரவேற்று பேசினார்.
மாநில பொருளாளர் ஸெய்யது அபூபக்கர் (தொண்டியப்பா) அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கெண்டு சிறப்பித்தனர் நிறைவாக மாவட்ட பொருளாளர் எ.கே. சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை யாற்றினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற எஸ்.கே.எஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு இறைமறை அல் குர்ஆன் வழங்கப்பட்டது.


