
3-10-2010 அன்று மாலை தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமூக விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு தேனி மாவட்டத் தலைவர் பீ. ஜமால் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எம். ஷர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் பி. ராஜா முஹம்மது அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது ஸித்தீக் அவர்கள் சமூக ஒற்றுமை மற்றும் கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் எழுச்சிமிகு உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பெருவாதியான பெண்களுடன் ஊரே கலந்து கொண்டு சிறப்பித்தது. பாக்கர் அவர்களின் உரையை உள்ளத்தைத் தொட்டதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திட அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

