- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பிரபல தமிழ் மற்றும் உருது மொழியில் பத்திரிகையாளரான எம்.பி.ரஃபீக் அஹ்மத் அவர்கள் நேற்று காலை மரணமடைந்தார்கள். இவருக்கு வயது 60 ஆகும். கடுமையான இதய அதிர்ச்சியின் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சென்னையில் முன்பு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் தடா என்ற கறுப்புச்சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட ரஃபீக் அஹ்மத் அவர்கள் பின்னர் குற்றமற்றவர் என விடுதலைச்செய்யப்பட்டார்.பெங்களூரிலிருந்து வெளிவரும் ராஷ்ட்ரிய சஹாரா என்ற உருது மொழி பத்திரிகையில் சிறந்த பங்காற்றியுள்ளார். ஆல் இந்தியா ஃபாரம் ஃபார் முஸ்லிம் ஜர்னலிஸ்ட் என்ற அமைப்பில் உறுப்பினராகவிருந்தவர் ரஃபீக் அஹ்மத்.சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் இலவச வெளியீடுகளை தமிழ்,ஆங்கிலம்,உருது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
கோவைக் குண்டு வெடிப்பின் போது கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் கைதிகள் சிறையில் சித்தரவதைக் காளாக்கப்பட்ட போது அவர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட PLEA என்ற அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டு சிறந்த பங்களிப்பை ஆற்றினார். இவர் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நேசத்திற்குள்ளானவர். அவரது உடல் சொந்த ஊரான வாணியம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆல் இந்தியா ஃபாரம் ஃபார் முஸ்லிம் ஜர்னலிஸ்ட் சார்பாக இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை பெரியமேட்டில் நடக்கவிருக்கிறது.
1985-களில் தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


