சமுதாயப் பணிகளை வீறு கொண்டு செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 18-01-2010 காலை 11 மணியளவில் சாய் பாபா காலணி கே.கே.நகர், புதூர், ஜீவா நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 350 பேர் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியருக்கு ஐ.என்.டி.ஜே நிர்வாகிகள் திருக்குர்ஆன் ஆங்கிலம் மொழியாக்கம் வழங்கி அழைப்பு பணியும் செய்தனர். மனுவை பெற்றுக் மாவட்ட ஆட்சியர் நமது நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார். இந்நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்ப பட்டது.

