- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
புதுவையின் முன்னாள் முதல்வர் M.O.H பரூக் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப் பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸின் புதுவை முன்னாள் முதல்வரும், சவுதி அரேபியாவில் இந்திய ஹைகமிஷனராக சிறப்பாக பணியாற்றி ய M.O.H பரூக் மரைக்காயருக்கு இந்தியாவில் கவர்னர் பதவி வழங்கப்பட போவதாக கடந்த சில மாதங்களாக காங்கிரசார் மத்தியில் பேச்சு எழுந்து வந்தது. தற்போது இதனை உண்மைப்படுத்தும் விதமாக பாரூக்கை ஜார்கண்ட் மாநில கவர்னராக குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் நியமித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் நிலை மற்றும் அம்மாநிலத்தில் நிலவிடும் சூழ்நிலையினை சுமூகப்படுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று மத்திய அரசு கருதிய நிலையில், அந்த மாநிலத்தில் பரூக்கை கவர்னராக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. இதன்படி எம்ஓஹெச் பரூக் ஓரிரு வாரங்களில் ஜார்கண்ட் சென்று பதவியேற்க உள்ளார். இதில் புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பரூக்கிற்கு கவர்னர் பதவி தரப்பட்டு ள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்
தகவல் அம்ஜ்த்கான், துபை


