INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,302

ஜார்கண்ட் மாநில ஆளுராக M.O.H பரூக் மரைக்காயர் பதவியேற்கிறார்!

புதுவையின் முன்னாள் முதல்வர் M.O.H பரூக் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப் பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸின் புதுவை முன்னாள் முதல்வரும், சவுதி அரேபியாவில் இந்திய ஹைகமிஷனராக சிறப்பாக பணியாற்றி ய M.O.H பரூக் மரைக்காயருக்கு இந்தியாவில் கவர்னர் பதவி வழங்கப்பட போவதாக கடந்த சில மாதங்களாக காங்கிரசார் மத்தியில் பேச்சு எழுந்து வந்தது. தற்போது இதனை உண்மைப்படுத்தும் விதமாக பாரூக்கை ஜார்கண்ட் மாநில கவர்னராக குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் நியமித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் நிலை மற்றும் அம்மாநிலத்தில் நிலவிடும் சூழ்நிலையினை சுமூகப்படுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று மத்திய அரசு கருதிய நிலையில், அந்த மாநிலத்தில் பரூக்கை கவர்னராக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. இதன்படி எம்ஓஹெச் பரூக் ஓரிரு வாரங்களில் ஜார்கண்ட் சென்று பதவியேற்க உள்ளார். இதில் புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பரூக்கிற்கு கவர்னர் பதவி தரப்பட்டு ள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்

தகவல்  அம்ஜ்த்கான், துபை