திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு அருகிலுள்ள புதுநகர் என்ற ஊரில் கடந்த 4 வருடங்களாக தொழுகை நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று ஒரு தனிமனிதரின் தலையீ்ட்டால் பூட்டப்பட்டது. அந்த அல்லாஹ்வின் பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

