இம்மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை மதரஸே ஆஸம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் (நுழைவாயில் காயிதே மில்லத் கல்லூரி) நடைபெற இருக்கும் பீஸ் கண்காட்சியை நடத்துவதற்கு குறித்து சமுதாய அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பீஸ் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
அதில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பொருளாளர் தொண்டியப்பா, துணைத் தலைவர் முனீர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஸையத் இக்பால் கலந்து கொண்டனர். தமுமுக சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், இந்திய விழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி முஹம்மது கான் பாகவி, மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்ஸுதீன் காஸிமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


