வடசென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள பிரபலமான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முஸ்லிம்களுக்காக தொழுகை இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது மருத்துவமனை விரிவாக்கதால் இடிக்கப்பட போவதாக 21-12-2009 அன்று நள்ளிரவு செய்தி வெளியானது. அச்செய்தியினை வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ராயபுரம் இஸ்மாயில், யூஸுஃப்கான் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விசாரித்தனர். அதன் பிறகு தலைமைக்கு எத்தி வைத்தனர். அத் தகவலையடுத்து இந்திய தவ்ஹீத் ஜாஅத் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோருடன இதஜ சகோதரர்கள் நிகழ்விடத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்றனர்.

அங்கு இதர சமுதாய அமைப்புகளான தமுமுக, PFI, ஜமுமுக, சுன்னத் அல் ஜமாஅத் பேரவை, தேசியலீக் பஷீர் மற்றும் அக்ரம்கானுடன் திமுக, காங்கிரஸைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் உள்பட அனைவரும் வந்தனர். அனைத்து அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீனை சந்தித்து தொழுகை இடத்தை இடிப்பதற்கான நடவடிக்கை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அன்று காலை முதல் இதஜவின் வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முகாமிட்டு இருந்தனர். காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்து ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் ப்ரியா வெளியில் வந்து கூடியிருந்த சமுதாய மக்களிடத்தில்,அமைச்சர் இல்லாத காரணத்தால் இது சம்பந்தமான அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு 15குள் இது பற்றி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதி அளிததனர்.
ஆனால் அங்கிருந்த தென்சென்னை ஐ.என்.டி.ஜே செயலாளர் ஹாஜா கலிமுல்லாஹ் எழுத்துப்பூர்வமாக எழுதித்தாருங்கள் என்றார் இதனை ஒத்துக்கொண்ட டீன் ப்ரியா அங்கிருந்த ஜமாஅத்களின் ஒரு பிரதிந்தியை உள்ளே வந்து கடிதத்தை பெற்றுக்கொள்ளும்படி கூற, ஹாஜா கலிமுல்லாஹ் தலைமையில் உள்ளே சென்று கடிதத்தை பெற்று வந்தார்.
கையொப்பம் இட்டு தரபட்ட கடிதம்



