- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அஸ்ஸலாமு அலைக்கும்... இது மாதிரியான நிகழ்ச்சிகள் இன்சா அல்லாஹ் நம்மில் சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும்...
ஆதம்.ஆரிபின் ( www.mannadykaka.com )
Submitted by வாசகர் on Fri, 07/23/2010 - 21:19. #
The news about insects eating tree is amazing i am really proud to view these kind of science oriented news. Please adopt these kind of news in future to fetch the new viewers.
Sajahan Sri Lanka
உயிரனங்களை உண்ணும் மரம் என்ற செய்தி அதிசய மாக இருந்தது. உண்மையிலேயே இது போன்ற செய்திகளை படிப்பதற்கு பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து வருங்காலங்களில் இதுபோன்ற செய்திகளை புதிய பார்வையாளர்களுக்காக பதிவுச் செய்யவும்.
ஷாஜஹான், ஸ்ரீலங்கா.
Assalamu Alaikkum ( Varah ),
I am muhammed ali zinna from saudi arabia, I wish to know how to join in ur jamath, am belongs to Vadalur, if any of ur Jamath have in Vadalur?.or tell me how to join..I like ur Jamath the way handling u the jamath with good principles. Insha allah i will back to native by november.In the mean while i wish to join as a member of ur jamath.I like ur jamath beacause it handles both Islamic activities and social work in a parallel way..I pray to Allah for ur ongoing and future activities in a good and honest manner..Dont blend ur way for the sake of controverisies surrounded by u.
Also i want to point out that, we are muslims we dont want to fight each other by portaying other mistakes in public.Its my humble request, as a islamic person i say these word..dont misten me..
Vassalam..
Mohamed Ali Zinnah, Saudi Arabia.
வ அலைக்கும் வஸ்ஸலாம்,
அன்பிற்கினிய சகோதரர் முஹம்மது அலி ஜின்னா, தாங்களின் அன்பான அறிவுரை கலந்த மெயிலுக்கு மிக்க நன்றி. அல்லாஹ் தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் செய்யட்டுமாக!
நாங்களும் மனிதர்கள்தான் சில நேரங்களில் எங்களையும் அறியாமல் தவறுகள் நடந்து விடுகிறது. தாங்களை போன்ற நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் சுட்டிக்காட்டும் பொழுது அத்தவறை திருத்திக் கொள்கின்றோம்.
தாங்கள் உறுப்பினராக சேர முன் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தாங்களின் சொந்த ஊர் வடலூர் என்கிறீர்கள். அது கடலூர் மாவட்டத்தை சேர்ந்தது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நம் ஜமாஅத்திற்கு கிளை இருக்கிறது. ஊர் சென்றால் அங்கு கேட்டு சேர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது இமெயில் முகவரி மற்றும் தொடர்பு நம்பரை தந்தால் நாம் தாங்களை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்கின்றோம்.
நீங்கள் ஸவுதியில் இருப்பதால் நம் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் அவர்கள், துபையில் இருக்கிறார். அவரை 00971-50-4985037 என்ற நம்பரிலும் அல்லது குவைத்தில் நம் பொறுப்பாளர் ஸாதிக் அவர்களை 00965-97659759 என்ற நம்பரிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விளக்கம் பெறலாம்.
நம் மாநில நிர்வாகிகளின் தொலை தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ளுங்கள்.
ஸையது இக்பால் - 9600191610
ஷிப்லி - 9003138825
செங்கிஸ்கான் - 9976885917
முனீர் - 9841070558
வஸ்ஸலாம்.
வெப்மாஸ்டர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் பணி இன்னும் வளரவேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் நான் துவா செய்கின்றேன். உங்கள் கவனத்தை தொண்டி அருகமையில் உள்ள எஸ்.பி பட்டிணம் பக்கம் திரும்புங்கள். அந்த ஊரில் வரதட்சனை தலை விரித்து ஆடுகின்றன
saleem
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு..
தங்களின் பதிலுக்கும் சகோதரர் பாக்கர் அவர்களுடைய அழைப்பிற்கும் மிக்க நன்றிகள்..என்னுடைய சலாத்தினையும் நன்றியையும் அவருக்கு தெரியப் படுத்துங்கள்.. இப்போதைய சூழ்னிலையில் வர இயலா விட்டாலும் இன்ஷா அல்லாஹ் வரும் காலத்தில் தங்களுடைய தலைமைக்கு வருகிரேன்..
தங்களுடைய மேலான கவனத்திற்கு, ஒருவர் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை எனில் யார் அவரைப் பற்றி என்ன கூறினாலும் கண்டு கொள்ள மாட்டோம்.. ஆனால் சகோதரர் பாக்கர் அவர்களின் மீது நல்ல எண்ணம் கொண்டிருந்த காரணத்தினாலே தான் அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்.. அவர் உண்மையாளர் என்னும் பட்சத்தில் இன்னும் அவர் மீது எம் போன்றவர்கள் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் கூடும் என்ற அடிப்படையே அதற்குரிய காரணம்.
வல்ல அல்லாஹ்விற்காக இரு இயக்கத்தினரும் கொண்ட வேற்றுமைகளை மறந்து விட்டனர், பொதுவான விஷயங்களில் ஒன்று சேர்ந்து விட்டனர் என்னும் போது நானும் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறந்து விடுகிறேன்..
உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. நீங்களும் த.மு.மு.க இயக்கத்தினரும் சேர்ந்து "நாங்கள் இரு இயக்கத்தினரும்(இ.த.ஜ மற்றும் த.மு.மு.க)சென்ற காலங்களில் பரஸ்பரம் கூறிய குற்றச்சாட்டுகளை வல்ல அல்லாஹ்விற்காக மறந்து விடுகிறோம். அதைப் போல் இரு இயக்க உறுப்பினர்களும், நல விரும்பிகளும் வல்ல அல்லாஹ்விற்காக மறந்து விடுங்கள்" என்ற கோரிக்கையை வைத்தீர்களாயின் எம் போன்ற எல்லோரும் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.. நான் எழுப்பிய கேள்வியே தேவை இல்லாத ஒன்றாக போயிருக்கும்.. அவ்வாறு ஏற்கனவே வைத்திருந்தால் மிக்க நன்றி..(அவ்வாறாகில் மன்னிக்கவும், சிறியவனாகிய எனக்கு அந்த செய்தி எட்டவில்லை).
இன்னும் என்னுடைய கேள்வி உங்களுடைய (குறிப்பாக சகோதரர் பாக்கர் அவர்களுடைய) மனம் புண்படும்படி செய்திருந்தால் வல்ல இறைவனுக்காக மனம் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்..
வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் தவறு செய்யாத மனிதர்களாகவும், செய்த தவறுகளுக்கு தவ்பா செய்து மனம் திருந்துபவர்களாகவும், சக மனிதர்களுக்கு அவர்களின் மானத்தை காக்கின்ற ஆடையைப் போன்று இருப்பவர்களாகவும் வாழச் செய்வானாக!!!!
உங்களில் ஓர் இஸ்லாமிய சகோதரன்.
முஹம்மது ரஃபீக்
அன்புச் சகோதரர் ரஃபீக் அவர்களுக்கு அல்லஹ் நல்லருள் புரிய துஆச் செய்கின்றோம்.
சமுதாயத்திற்காக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் நம் தலைவர் சகோதரர் பாக்கர் அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டமைக்கு மிக்க நன்றி.
உங்களை போன்ற நல்ல எண்ணங்களை கொண்ட சகோதரர்களை வரவேற்க எமது தலைமையகத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
தாங்கள் கேட்ட இந்த துஆவை ...
வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் தவறு செய்யாத மனிதர்களாகவும், செய்த தவறுகளுக்கு தவ்பா செய்து மனம் திருந்துபவர்களாகவும், சக மனிதர்களுக்கு அவர்களின் மானத்தை காக்கின்ற ஆடையைப் போன்று இருப்பவர்களாகவும் வாழச் செய்வானாக!
ஏக இறைவன் கபூல் செய்யட்டும்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாத்தை பின் நிறுத்தி இயக்கத்தை முன் நிறுத்தியதால், கடந்த கல வருடகாலமாக இஸ்லாமிய பிரச்சாரத்தை நம்மில் பலர் அடியோடு மறந்து விட்டனர்.
இனியும் இந்த இழிநிலை தொடராமல் இருக்க தனி நபர்களுக்கு ஜெ..ஜெ... போட்டு கூஜா தூக்கும் தேவையில்லாத வேலையை விட்டு விட்டு இஸ்லாமிய பணி செய்ய ஒன்றுபட வேண்டிய கட்டயாத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் உள்ளார்கள். இதனை நாம் உணர்வது எப்போது?
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் என்றால் என்ன? என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை குர்ஆன் ஹதீஸ் போதிக்கின்ற நமக்கு கிடையாதா?
நாம் நமது சமுதாயத்திற்காக சாதிக்க வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்க தேவையற்றவற்றை விட்டுவிடுவதும் நன்மைதானே. நீங்கள் இயக்கத்தை சார்ந்து இல்லாமல் சமுதாயத்தை சார்ந்து இருங்கள்.
-அப்துல் முனாஃப்.
Dear brother,
Nice article (சிறந்த பண்பு) about personality.keep it up.
Raja mohamed
Kuwait
அஸ்ஸலாமு அலைக்கும்,
டெல்லிக்கு போன விஷயமாக தம்பி அல்தாஃபியை ஏன் காணவில்லை என கேட்டதற்கு, ஓயாத அவதூறுகள் என நம்ம அண்ணன் ஒப்பாரி வைத்துள்ளாரே! அவதூறே அவதூறு குறிதது எழுதுவது அதிசயமான ஒன்றுதான்.
இவர் சொல்கிறார். ததஜவில் சேராதவர்கள் ததஜவின் உள்விவகாரத்தில் கேள்வி எழுப்ப அதிகாரம் இல்லையாம். என்ன ஒரு கண்டுபிடிப்பு. சரி மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகதான் தெரிகிறது. அப்படியானால், கடந்த வருடம் தமுமுகவின் பைலா விஷயமாக எப்படி எல்லாம் காட்டு கூச்சல் நீங்களும் உங்கள் அமைப்பைச் சேர்ந்த ததஜகாரர்கள் போட்டீர்கள், பேசினீர்கள்.
பைலாவை காணவில்லை, பைலாவை காணவில்லை என குழுமத்தில் போட்டு கேவலப்படுத்தினார்களே. அது தமுமுக உள்விவாகாரமாக உங்களுக்கு தெரியவில்லையா? தமுமுக பைலாவை பின்பற்ற போவது தமுமுகவை சேர்ந்தவரா? அல்லது ததஜக்காரா? அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என கேட்டீர்களா? வழக்கு தொடுக்க போவதாக பிளாக் மெயில் பண்ணுனீர்களே. தலைவலியும், திருகுவலியும் தனக்கு மட்டும் தானா?
-அப்துல் காதர்,
சென்னை - 1.
Assalaamu Alaikkum
I think you are in a way how Mr.Abu Abdullah of Annajath was going in the past 20 years.
Abu Abdullah is a good man and his knowledge, his speech is also good. But for the last 20 years, he wrotes lot of articles against thowheed jamath group. And he wasted his 20 years by critisizing these jamaths instead of making dawah to public.
If you take his 20 years history, his articles and speeches against thowheed group is more, more and more than articles and speeches relating to dawah.
If he would have concentrated on dawah to public peoples like what JAQH, TNTJ etc. is doing, his knowledge would have achieved and changed lot of peoples to quran and sunnah.
What i feel is The INTJ is also is going on the same way. Don't waste time on commenting others. spent your time on dawah activities. concentrate on your own way. inshal allah your dawah activities will reach lot of peoples.
regards
rafiq (raffic26@gmail.com)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ரஃபீக் அவர்களின் நல்லதொரு அறிவுரைக்கு மிக்க நன்றி.
நாம் யாரையும் சீண்டுவது கிடையாது. தாங்கள் சொன்ன தஃவா பணியினை செய்வதே நம் வேலையும். கடமையுமாக இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எங்கள் மாநிலத் தலைவர் இதற்கான விளக்கத்தை அளித்தார். இன்று காலை (08.07.2010) இந்திய நேரம் 9 மணி அளவில் விண்டிவியில் ஒளிபரப்பப் பட்டது. நிர்பந்ததின் அடிப்படையில்தான் நாங்கள் பதில் அளிக்கின்றோம்.
இறையருளால் ஏகனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை முஸ்லிம் அல்லாத மாற்றுமத சகோதரர்களிடம் கொடுக்கும் அரும் பணியினை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து செய்து வருகிறது வரும் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறதாங்கியில் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி இறையருளால் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை செய்து வருகிறது.
வஸ்ஸலாம்
வெப் மாஸ்டர்.
அஸ்ஸலாமு அலைக்கும், பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளை இலங்கையில் நடத்த சில கொள்கை சகோதரர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் ஐஎன்டிஜேயின் ஆலோசனை உதவியுடன் பேராசிரியர் விரைவில் இலங்கைக்கு அழைக்கப்படுவார்.
இலங்கையில் பிஜெயின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த குழுவே முயற்சியில் இறங்கி உள்ளது..
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
அன்புச் சகோதரரே!
தயவு செய்து அடுத்தவர் மேட்டர்களை பரப்பித் திரியாதீர்கள். இந்த ஆக்கம் என்னுடையது! இதை இதில் வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது!
--
DEEN
அன்புச்சகோதரர் தீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பல ஆயிரம் பேர்களுக்கு செல்லும் குழுமத்தில் உங்களது கருத்து பதியப்பட்டு இருந்தது. அதில் நியாயம் இருந்தது. எங்கள் இமெயில் முகவரிக்கு வந்த நியாயமான கருத்தை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து விட்டோம். இதில் (புள்ளி, கமா என) எந்த மாற்றமும் செய்யாமல் தாங்கள் கருத்தை அப்படியே பதிந்து விட்டோம். உங்களுக்கு முன்பாக சில சகோதரர்களின் கருத்தை பதியவும் பொழுது அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள், பொதுவாக வைத்த கருத்துக்கு அனுமதி தேவையில்லை என சொல்லி இருந்த காரணத்தால், தாங்களிடமும் அனுமதி கேளாமல் பதிந்து விட்டோம். தவறுக்கு வருந்துகிறோம். தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.
-வெப் மாஸ்டர்.
ஸலாம்...
தலைப்பை "பரங்கிப்பேட்டை" என்று போட்டிருக்கலாமே!
இந்த செய்தியை பதிவிட்ட "பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்" www.mypno.com என்ற இணையத்திற்கு நன்றி தெரிவித்து இருக்கலாமே!
-கலீல் பாகவீ, குவைத்.
மரியாதைகுரிய மவ்லவி கலீல் பாகவீ அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைப்பு மற்றும் பதிவு செய்தவர்கள் பெயரும் போடப்பட்டு விட்டது.
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. (வெப் மாஸ்டர்)
டாக்டர். அப்துல்லாஹ்வையும் விட்டுவைக்காத பிதற்றல் ஜென்மம் !
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை தன வாழ்வியல் நெறியாக பின்பற்றியுள்ள டாக்டர் அப்துல்லாஹ் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் மக்களுக்கு போதித்து வருகிறார். உதரணத்திற்கு சொல்வதாக இருந்தால் அவர் சவுதி அரேபியாவில் ஆற்றிய சொற்பொழிவு நம் சமுதாய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, அவர் அந்த உரையில் பிள்ளை வளர்ப்பை மனோ தத்துவ ரீதியில் வளர்ப்பது குறித்து அற்புதமாக ஆற்றிவுள்ளார். சுருங்க சொல்வதாக இருந்தால் பல ஆயிரம் ருபாய் கொடுத்து பெற வேண்டிய மனோ தத்துவ கருத்துகளை சமுதாயத்தின் நன்மைக்காக போதித்துள்ளார். இது அனைவராலும் வரவேற்க பட வேண்டிய ஒன்று. அவரை பராட்டாவிட்டலும் எதிர்க்காமல் இருப்பது தான் ஒரு நல்ல சமுதாய விரும்பியின் செயலாக இருக்கும்.
பல கூட்டங்களில் உரையாற்றியுள்ள டாக்டர் அப்துல்லாஹ் மார்க்க விசயங்களை பற்றி பேசும் போது தன்னிடம் அது பற்றி கேட்க வேண்டாம் கற்று அறிந்த ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அவர் அதிராம்பட்டினம் கூடத்தில் பேசியது அவரின் ஒழுக்கத்தை பறைசாற்றும் விதமாக அமைந்தது. எத்தனையோ பேர் இஸ்லாத்தை ஏற்றாலும் கடவுளே இல்லை என்ற நிலைக்கு சென்று பிறகு இஸ்லாத்தை ஆய்வின் மூலம் தன வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டது என்பது மிகவும் சந்தோஷ பட வேண்டிய விஷயம்.
தற்போது விசயத்திற்கு வருவோம், டாக்டர் அப்துல்லாஹ் செல்லும் இடம் எல்லாம் கூடும் கூட்டத்தை கண்டு பொறுக்க முடியாத தனி நபர் தனக்கே உரிய பாணியில் அவரை கேவலபடுத்த இறங்கி உள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்காணிப்பதாக கூறியவர் பிறகு வெளிநாட்டிலிருந்தும் / பிற மக்களிடமிருந்தும் கிளம்பிய எதிர்பால் தடம்புரண்டு அவரிடமே சென்று சரண்டரும் ஆனார். பின்னர் டாக்டர் அப்துல்லாஹ்வை பற்றி கூறும்போது அவர் கொள்கையில் உறுதியானவர், பிற்காலத்தில் தங்களோடு சேர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளதாக சிலாகித்து கூறியவர் தற்போது டாக்டர் அப்துல்லாஹ் அளித்த பேட்டிக்கு பிறகு அவரை பிராண்டி உள்ளார்,
இதுவரை சமுதாய தலைவர்களையும், இயக்கங்களையும் தரக்குறைவாக விமர்சிதுவன்தவர், தற்போது இஸ்லாத்தை ஏற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களைஎல்லாம் ஏசியும் பேசியும் வருவதை கண்டு பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று பிறருக்கு போதித்தால் மட்டும் போதாது அதனை தன் வாழ்க்கையிலும் நிலை நாட வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் போனதுதான் வினோதம். அல்லாஹ்தான் அவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும்.
இப்படிக்கு
இறையடியான்
காஸா சர்வதேச கடல் எல்லையில் கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேலிய கொடுமைகளுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு லிப்டன் சர்கிளில் கண்டன 04.06.2010 வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கன் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
அப்துல்லாஹ் அவர்கள், "சிகரட்" குடிக்க மாட்டேன், என்று சபதம் எடுத்து விட்டு, பின்னால், சிகரட் குடித்ததால், அவர் பொய் சொன்னதாக ஆகி விடாது.ஒரு தனி மனிதர், அதுவும், இஸ்லாதிற்கு புதிதாய் வந்தவர் இப்படி தவறு செய்தாலும், அதை மக்கள் மத்தியில் சொல்லி, கேவலப்படுத்துவது, சரியானது இல்லை. தான் சம்மந்தமான விஷயங்களை மட்டும் பொய்ஜே சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. தன்னை தீண்டியவர்களை அல்லது தீண்டியவர்களாக நினைக்கப்பட்டவர்களை , வெறிப்பிடித்து தாக்குவது இவரின் போக்காக ஆகி விட்டது. சில தரீக்கா கும்பல்கள், அவர்கள் ஷைகு மார்கள் மலங்களை கூட சாப்பிடுவார்களாம்.
அப்படிக்கூட "தனி நபர் தரீக்கா ஜமாத்" (த ந த ஜ) பக்தர்கள் செய்தாலும், செய்வார்கள். ஏன் என்றால், தனது ஷைகு "பொய் ஜே" தொழ பள்ளி வருவதில்லை என்றாலும், ஷைகுக்கு அதன் உரிமை இருக்கு. அது அவரின் "தனிப்பட்ட விஷயம் " என்று நினைக்கிறார்கள். பள்ளிக்கு தொழ வராதது, " பகிரங்கமாக செய்யப்படும் தவறு". அதை தவராக நினைக்காதவர், ஒரு தனி மனிதர், தன் தங்கி இருக்கும் இடத்தில் சிகிரட் குடித்தது, இவருக்கு
பெரிதாகி போய் விட்டதாம். ஆனாலும், அப்துல்லாஹ் அவர்களுக்கு, இது ஒரு வகையில் நல்லது. பொய்ஜே வை அடயாளம் கண்டு, பொய்ஜே வின் மார்க வழிக்கேடுகளின் பக்கம் போகாமல் இருக்க இது உதவவேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
-அபூ அப்துல்லாஹ் ,துபை.
வாசகர் ஒருவர் தன் பெயரை வெளியிடாமல் கீழ்காணும் தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அவர் கருத்துக்கு இணங்க நாம் தலைப்பை மாற்றி விட்டோம். தன் கருத்துக்களை பதியும் வாசகர்கள் பெயரை எழுதினால் நல்லது. (ஆ-ர்)
அல்லாஹ்-க்கு விருப்பமான இருவார்த்தை என்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், வேறுவகையான செய்தியாய் இருக்குமோ என்றே என்னத்தோன்றியது...
அஸ்ஸலாமு அலைக்கும், புதுமடம் ராஜா முஹம்மது அவர்களே! அண்ணனை விமர்சிக்க தனி தகுதி வேண்டும் எனும் வாசகமே நீங்கள் தக்லீதின் மூத்த உருவம் என்பதை படம் பிடித்துக் காட்டுக்கிறது. ஒரு கொள்கைவாதியிடம் இருந்து இப்படியான வாசகங்கள் வெளிப்படுவது ஆச்சர்யம் என்றாலும் தனி வழி தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் நிலைத்திருக்க உங்களுக்கு தகுதி உள்ளதென்பதை உங்கள் வாசகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உங்கள் அண்ணன் இலங்கை வந்த நேரம் SLTJ என்றெ ஒரு அமைப்பை துவங்குகிறார். சிலகாலம் சென்று அந்த அமைப்பு துவங்கப்படும் பொழுது எந்த கொள்கையில் இருந்ததோ அதே கொள்கையில் இருக்கும் பொழுது வழி கெட்ட அமைப்பு என ஃபத்வா வழங்கினார்.சிலகாலம் சென்று, அவர் எந்த அமைப்பை வழி கெட்டது என ஃபத்வா வழங்கினாரோ அதே கொள்கையில் இருக்கும் பொழுது மீண்டும் அதை நேர்வழி என்கிறார்.
தனக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் பொழுது கீரியை உடும்பு என்கிறார். தனக்கு சாப்பிட தேவையில்லை எனும் பொழுது உடும்பை கீரி என்கிறார். இந்த இரட்டை வேட நாடகத்தை விமர்சிக்கும் தகுதியை எந்த பல்கலைக்கழத்தில் போய் பெற வேண்டும் என்று எமக்கு புரியவில்லை? அப்படி ஒரு பல்கலைக்கழம் இலங்கையில் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் இருப்பதாக தகவல் இல்லை.
ராஜா முஹம்மது அவர்களே! உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். இதே வேலையை பிஜே அல்லாமல் இன்னொரு அறிஞர் செய்தால் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள்?
தவறுகளை யார் செய்தாலும் அதனை தயவு தட்சண்யம் இன்றி விமர்சிப்போம் என்று முழங்கிய ஒரு ஜமாஅத், இன்று தனி மனிதனை விமர்சிக்க தகுதி வேண்டும் எனும் தரம் கெட்ட சிந்தனையில் முழ்கி விட்டது மன வேதனையான விஷயம்தான்...
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும், இலங்கை முஸ்லிம்கள் சம்பந்தமாக செய்திகளை அவ்வப்பொழுது தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்ல ஐஎன்டிஜெயின் இணையதளம் ஊடக செயல்பாடாக எண்ணியுள்ளேன் இன்ஷா அல்லாஹ்.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும், நீங்கள் ஏன் உங்கள் நிகழ்ச்சிகளின் வீடியோ கிளிப்ங்ஸ்களை உங்கள் இணையதளத்தில் இணைக்காமல் இருக்கிறீர்கள். அவை இணைத்தால் மக்களுக்கு மிகுந்த பயனைத் தரும். குறிப்பாக ஹதீஸ்களை தெரிந்து கொள்ள முடியும்.
-நஸுருதீன்.
இலங்கை செய்திகளை உடனுக்கு உடன் தரும் சகோதரர் ஸராஃபுதீன் அவர்களுக்கு நன்றி.
இலங்கையும் பிஜே விட்டு வைக்கவில்லை போல.
-காஜா மைதீன், புதுப்பேட்டை, சென்னை.
அஸ்ஸலாமு அலைக்கும், விவாத மேடைகளை தனது ஆயுதமாக பாவித்து பழக்கப்பட்ட டிஎன்டிஜே அறிஞர் ஐஎன்டிஜே பெரியகுளம் கிளையின் விவாத அழைப்பை இன்று வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம்தான்.
அஞ்சாத சிங்கம் இப்படி எல்லாம் அசிங்கப்பட்டு கொண்டு இருப்பது கவலையான சங்கதிதான். இன்னும் அந்த பெரியாரை புகழ்வதையே தாஃவா பணி என்று கருதக்கூடிய அன்புச் சகோதரர்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. ஊசி தங்கம் என்றாலும் அதை கண்ணிலே குத்தி விடக்கூடாது.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.sharafmmc@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அன்பார்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களுக்கு, இந்த கேள்வியை நான் கேட்பதினால் என்னை எந்த ஒரு இயக்கத்தினையும் சார்ந்தவன் என்று எண்ணி விட வேண்டாம்.. நடுனிலையான முறையிலே கேட்கின்றேன்..
என்னுடைய எளிதான கேள்வி இது ஒன்று தான்.. சகோதரர் பாக்கர் அவர்கள் த.மு.மு.க வினரை பார்த்து சுனாமி திருடர்கள், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைப்பவர்கள் என்று பல முறை பேசி இருக்கிறார்.. அவர்களும் சகோதரர் பாக்கரை இழிவான முறையில் விமர்சனம் செய்துள்ளார்கள்.. இருவரும் பரஸ்பரம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அப்படியே உள்ள நிலையில் இருவரும் இப்போது சேர்ந்து விட்டனர்.. (சேர்ந்த வகையில் மகிழ்ச்சி தான்).. பொதுவான காரியங்களில் ஒன்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே எனினும் இருவரும் கூறிய குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளனவா? இருவரும் தத்தமது நிலைகளில் அப்படியே இருக்கின்றனரா? இல்லை எவர் கூறியது உன்மை?
தயவு செய்து இதற்கான விளக்கத்தை தரவும்.. இந்த ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விட்டால் உங்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் மேலும் கூடும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாட்சியுடன் இந்த கேள்வியை நான் வைத்துள்ளேன். தக்க பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்..
உங்களின் ஒரு இஸ்லாமிய சகோதரன்,
முஹம்மது ரபிஃக்.
சகோதரர் முஹம்மது ரபிஃக் அவர்களே! தாங்களே “இருவரும் இப்போது சேர்ந்து விட்டனர்.. (சேர்ந்த வகையில் மகிழ்ச்சி தான்).. பொதுவான காரியங்களில் ஒன்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே“ என சொல்லி விட்டீர்கள்.
மனிதர்கள் என்ற ரீதியில் சில கருத்து வேறுபாடுகள் வருவதும், அதன் பிறகு அவ்வுண்மைகளை தெரிந்த பிறகு ஒருவருக்கு ஒருவர் அல்லாஹுக்காக பரஸ்பரம் சேருவதும் இயற்கையே. அந்த வகையில் பாக்கரை குறித்து தமுமுக சகோதரர்களும், தமுமுக சகோதரர்களை குறித்து பாக்கரும் விமர்சனம் செய்தார்கள். இருதரப்பும் உண்மைகளை உணர்நது கொண்டார்கள். பொதுவான பிரச்னைகளில் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். நன்மைதானே. அல்லாஹ் கேள்வி கேட்ட உங்களுக்கும், தமுமுக, இதஜ அமைப்பினருக்கும் நேர்வழி வழங்கட்டுமாக!
வஸ்ஸலாம்.
-வெப் மாஸ்டர்.
நம்மளை அழிக்க வெளிய இருந்து rss காரன் தேவை இல்லை *நம்மளை நாம் நமது பொய் ,பொறமை ஆணவம் இவற்றால் அழித்து கொள்கிறோம்.
-முஹைதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இலங்கையில் பாக்கர் பிஜெ சேர்ந்து உருவாக்கிய SLTJ-யை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த TNTJ மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைபுல்லாஹ் வழிகெட்ட ஜமாஅத் என்று பகிரங்கமாக ஃபத்வா கொடுத்தார். இப்போது அதே SLTJ-யை TNTJ கிளையாக செயல்பட வைக்க பிஜெ கங்கணம் கட்டி செயல்படுகிறார்.
தனக்கு தேவைப்படாத போது வழிகேடு. தேவைப்படும் போது நேர்வழி. ஆஹா அண்ணன் வழி தனிவழி தானங்கோ....
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.
அதைவிடுங்க பிரதர் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது கோவை குண்டுவெடிப்புக்கு பின்னர் கூட்டம் நடத்த முடியாமல் தவித்த பீஜெ அளுமையிருந்த தமுமுக-விற்ககு மேலப்பாளையத்தில் கிருஷ்ணசாமியுடன் புதியதமிழகம் கட்சியுடன் ஒரேமேடையில் பேசி அண்ணன் தொப்புள்கொடி உறவு என்றும் நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்வர்களுக்கு பிரச்சனையென்றால் முஸ்லிம்கள் வருவார்கள் அதுபோல் முஸ்லிகளுக்கு பிரச்சனை என்றால் தாழ்ப்பட்ட மக்கள் வருவார்கள் என்ற போது கூட்டம் ஆமா ஆமா என்று கூக்குரலிட்டது அடுத்து பேச வந்த கிருஷ்ணசாமி இதேபோல் கூறிவிட்டு (ஊர்பெயர் ஞாபகமில்லை) கோயிலில் தேர் இழுக்கும் பிரச்சனையுள்ளது அங்கு தேர் இழுப்பதற்க்கு முஸ்லிம்கள் வந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் இதனை மேடையில் ரசித்த அண்ணன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது தான் செய்தி (வீடியோ எடுக்கப்பட்டது. இலாஹியை தொடர்புகொண்டால் கிடைக்க வாயப்ப்புண்டு)
-தென்காசி ஸித்திக்.
எல்லோருக்கும் எனது ஸலாம்!
ஐஎன்டிஜே டிஎன்டிஜே-யை பற்றியும் டிஎன்டிஜே ஐஎன்டிஜே-யை பற்றியும் மாறி மாறி குற்றம் சாட்டி கூறுகிறார்கள்.
ஒருவர் குற்றத்தை மறைத்து அவர்களுக்கு அழகிய முறையில் குற்றத்தைச் சுட்டிக் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு நீங்கள் அவர்களை இகழவும், அவர்கள் இவர்களை இகழ்ந்து பேச மேடை போட்டுக் கொண்டு செயல்படுவது நல்லதா?..
இன்ஷா அல்லாஹ் இந்த தவறு இனிமேல் நடைபெறாது என நம்புகிறேன்.
-ஸித்தீக்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பழனிபாபா பொம்பளையே வைத்துக் கொண்டு இருந்தார், ஹாமீது பக்ரி குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை தகவல், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தவ்ஹீதை விட்டுக் கொடுக்க சொல்கிறார், பாக்கர் பஸ்ஸில் பொம்பளையுடன் பயணம் செய்தார், ஜாகிர் நாயக் குழப்பவாதி. சுன்னாவை விட்டுக் கொடுக்க சொல்கிறார்.
நாளை? முஹம்மது அல்தாஃபி தவ்ஹீதை சொல்வதாக கூறி கலவரத்தை உண்டு பண்ணுகிறார். இன்னும் எதிர்காலத்தில் எத்தனை பேரோ... அல்லாஹ்விற்கே வெளிச்சம். அல்லாஹ் அறிவான். பிஜே திருந்துவதற்கு துஆச் செய்யுங்கள்.
-முஹம்மது ஸுலைமான்
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.ஜாஸ்மீன் அவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவியாக வந்துள்ளார்கள். அவர்களுக்கு சார்பாக நான் வாழ்த்துத் தெரிவிக்கின்றேன். இனி வரும் காலங்களில் நாம் சமுதாயம் எழுச்சி மிகு சமுதாயமாக வர வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
-அபூ ஃபவ்வாஸ், அம்பகரத்தூர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இலங்கையில் பேருவளை எனும் ஊரில் தவ்ஹீத் பள்ளி வாசல் எரிக்கப்பட்டு இறந்த கொள்கை சகோதரர்களின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டு இன்னும் பல சகோதரர்கள் காயப்பட்ட சம்பவத்திற்கு பின் ஐஎன்டிஜே தலைமை நேரடியாக களத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியதையும் காயம் அடைந்த சகோதரர்கள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்காக வந்த வேளை அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்ததையும் இலங்கை சகோதரர்கள் சார்பில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த பிரச்னைக்கு காரணமானவர்கள் டிஎன்டிஜெயின் இலங்கை உறுப்பினர்கள். ஆனாலும் டிஎன்டிஜெ சார்பாக எதையும் செய்ய முன் வரவில்லை. ஆனாலும் மரணித்தவர்களின் ஜனாஸாவை தாங்களின் இயக்க விளம்பரத்திற்கு பாவிக்க மட்டும் இவர் மறக்கவில்லை. தாங்கள் வாய் பேச்சு மன்னர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். ஐ.என்.டி.ஜெக்கு நமது நன்றிகள்.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.
சகோதரர் ஸராஃபுதீன் அவர்களே, கடிதங்களை தாங்கள் இமெயில் ஐடியுடன் அனுப்பி வைத்தால் நல்லது. தமிலிங்கிஸ் கொஞ்சம் சிரமாக இருக்கிறது.
Assalamu Alaikum,
Dinamalar inayathalathil, kayal pattinatthai sernda, Fathi Muthu enra oru manavi, kalvikkaha uthavi kettu irukkirarhal, thayavu koorndu inda manaviyin kudumbatharai anuhi, evvaru uthavi seyya vendum enru kettu nam inaya thalathil veliyittal, iraivan kirubayal anda manavikku nammal mudinda uthaviyai seyyalam. -Abu Fawwaz
அஸ்ஸலாமு அலைக்கும்
தினமலர் இணையதளத்தில், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஃபாத்திமுத்து என்ற ஒரு மாணவி, கல்விக்காக உதவி கேட்டு இருக்கிறாள். தயவுகூர்ந்து இந்த மாணவியின் குடும்பத்தாரை அணுகி, எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்று நம் இணையதளத்தில் வெளியிட்டால், இறைவன் கிருபையால் அந்த மாணவிக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம்.
-அபூ ஃபவ்வாஸ், அம்பகரத்தூர்.
சகோதரர் அபூஃபவ்வாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் தலைமைக்கும் இதை எடுத்துச் சொல்லி உள்ளோம். அம்மாணவிக்கு உதவிட நம் இணையதளத்திலும் கல்விக்கு உதவிடுவீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளோம். -வெப்மாஸ்டர்.
as.alkm. tntj thadam puranda thowheed jamath aga mari iruppadu bakar patriya silai thirappu avadoorudan nirubanamagivittadhu. oru arivali ariviliyaGA MARIVITTADHU KAVALAYANA VIDAYAMTHAN. satthiya pani seydhavargal asathiya pinikki alagi vittargal enbadu vedikkai enbadai vida vedanai enru than sollo vendum. SHARAFDEEN SRI LANKA
அஸ்ஸலாமு அலைக்கும், டிஎன்டிஜே தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்தாக மாறி இருப்பது பாக்கர் பற்றிய சிலை திறப்பு அவதூறுடன் நிரூபணமாகி விட்டது. ஒரு அறிவாளி அறிவிளியாக மாறி விட்டது கவலையான விடயம்தான். சத்தியப் பணி செய்தவர்கள் அசத்தியப் பணிக்கு ஆளாகி விட்டார்கள் என்பது வேடிக்கை என்பதை விட வேதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.
தான் 1997-இல் செய்ததை வசதியாக மறந்து விட்டு, இன்று பாக்கரை யாதவ் என வசைபாடும் பிஜேயே நீங்கள் என்ன பறையரா?! என நியாயம் உள்ளவர்களே கேளுங்கள்.
-செங்கிஸ்கான்.
சகோதரே! நீங்கள் பறையரா?! என்று விமரசனம் செய்துள்ளிர்கள் இது நல்லதாக தோன்றவில்லை. தொண்டி பெரியார் இன்று எதை வேண்டும் என்றாலும் சொல்லுவார் அதற்காக நாமும் அதே பாணியில் போவது சரி இல்லை.
-ஸலீம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். கடமை வீரர்களே! நாங்கள் கலங்கமாட்டோம்... சமுதாயவீதிகளில் சக்ரமாய் சுழன்ற நீங்கள் எதிர்பாரா தருணத்தில் இறையழைப்பை ஏற்றீரொ... கொடுங்சிறையில் வாடிவரும் கொள்கை சகோதரனைமீட்க தலைநகரை கையகபடுத்தி தொண்டைகுழியின் அடிதொட்டு தொடர்முழக்கம் செய்திட்ட வேளையில் எம்மை "ஷஹாதத்" கூறவைத்தது கொடுமைதான்... இருந்தாளும் கடமை வீரர்களே! நாங்கள் கலங்கமாட்டோம்...
மறுமையின் வெற்றிவாழ்விற்க்கு இம்மை வாழ்க்கையை இலப்பமாய் நினைப்பவர்கள் நாம்... இன்று நீங்கள் இன்ஷாஅல்லாஹ் அடுத்தது நாங்கள்... போய் வாருங்கள் எங்கள் போராளிகளே... நீங்கள் வாழும்போது கண்ட சமுதாய கனவுகள் வெற்றியின் விடியல்கள் நனவாக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்... இறைவன் நாடினால் வெற்றியோடு உங்களை மறுமையில் சந்திப்போம்... கடமைவீரர்களை நிச்சயமாக நாங்கள் கலங்கவேமாட்டோம் காரணம் நீங்கள் விட்டு சென்ற கடமைகள் எங்களுக்கு காத்திருப்பதால்... உங்கள் மறுமையின் வெற்றிகாக பிரார்த்திக்கும் சகோதரன் வேங்கை இப்றாகிம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மக்கள் தொகை கணக்கெடுப்புப்பற்றிய உங்கள் இணையதளத்தில் கண்ட விளக்கம் மிகவும் வரவேற்கதக்கது. அதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான மாதிரி படிவம் கிடைத்த உடன் உங்கள் இணையதளத்தில் பதிந்தால் நம் சமுதாய மக்களுக்கு முன்கூட்டியே இதை சொல்ல ஏதுவாக இருக்கும். வல்ல இறைவன் உங்களுக்கு இந்த பணிக்கு மிக பெரிய கிருபை செய்வான்.
-அபூ ஃபவ்வாஸ், அம்பகரத்தூர்.
பாதை மாறினாரா பாக்கர்? பதில் கூறுங்கள் பரப்புங்கள் வீடியோ ஆதாரத்துடன் .....
-பாதுஷா.
Mohammed Shafi, Avarhale, Mr. krishna Samiyudan Kalandu konda Porattam Theendamai suvar ahatrum porattam, Aalaya nulaivu porattam alla endra avarhaludaya vilakkatthai therindu kondu, athil thavaru irundal, kurai koorungal athai vittuvittu, illathathai kelviyaha ketkatheerhal, poiyana kelviyai nooru thadavai kettalum unmayana pathil onru thaan
mehaboob
முஹம்மது ஷாஃபி அவர்களே, திரு.கிருஷ்ணசாமியுடன் கலந்து கொண்ட போரட்டம் தீண்டாமை சுவர் அகற்றும் போராட்டம். அது ஆலய நுழைவு போராட்டம் அல்ல என்று அவர்களுடைய விளக்கதை தெரிந்து கொண்டு, அதில் தவறு இருந்தால் குறை கூறுங்கள். அதை விட்டு விட்டு இல்லாததை கேள்வியாக கேட்காதீர்கள்.
பொய்யான கேள்விகள் நூறு தடவை கேட்டாலும், உண்மையான பதில் ஒன்றுதான்.
-மக்பூப்.
Assalamu Alaikum,
Sahotharar S.M.Paker Avarhal, Yadava Maha Sabai, Silai thirappu vizavirkku sendru silai thirakkumbothu udan irundar endrum, vaki taki yai remote controle endrum poi uraikkum koottatharukku, udanadi(aathara poorvamana) bathil kodutha INTJ virkku, iravanin uthavi enrendrum kidathida valla rabbai pirarthippom
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் பாக்கர் அவர்கள், யாதவ மகா சபை சிலை திறப்பு விழாவிற்கு சென்று சிலை திறக்கும் பொழுது உடன் இருந்தார் என்றும், வாக்கி டாக்கியை ரிமோட் கண்டோரல் என்றும் பொய் உரைக்கும் கூட்டத்தாருக்கு உடனடி (ஆதாரப்பூர்வமாக) பதில் கொடுத்த இந்திய தவ்ஹீத்விற்கு இறைவனின் உதவி என்டென்றும் கிடைத்திட வல்ல ரப்பை பிரார்த்திக்கின்றேன்.
-அபூ ஃபவ்வாஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் பாக்கர் அவர்களுக்கு ஸலாம். கடையநல்லூர் உங்கள் சகோதரர்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. அங்கு கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்
முஹம்மது ஸலீம், கடையநல்லூர்.
assalamu alaikum.sathiya pani purivour palar sarugi vilundu aduthavan kurai pesave kalathai odukkum kalathil ungal inayathalam oru vithiyasamana murayil pani purivadhu parattukkuriyadu.vegamay oudum rayilai parthu vayal veli erumaigal kathuvadhal rayil than payanathai idayil niruthuvadillai.ungal sathiya payanamum appadiye thodarattum.insha allah
அஸ்ஸலாமு அலைக்கும், சத்திய பணி புரிவோர் பலர் சருகி விழுந்து அடுத்தவன் குறைப் பேசி காலத்தை ஓட்டும் காலத்தில் உங்கள் இணையதளம் ஒரு வித்தியாசமான முறையில் பணி புரிவதுப் பாராட்டுக்குரியது.
வேகமாய் ஓடும் ரயிலைப் பார்த்து வயல் வெளி எருமைகள் கத்துவதால் ரயில் தன் பயணத்தை இடையில் நிறுத்தி விடுவதில்லை. உங்கள் சத்தியப் பயணமும் அப்படியே தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்.
-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.
Assalaamu alaikum va rahma., Beautiful and useful guidance to ummath. Alhamdhulillah. WELDONE to Dr AP Mohammed Ali sahib.
Yours Moulavi M.ABUL HASAN Jamali
கருத்து மோதல் இல்லாமல் கடமையில் காரியம் ஆற்றினால், நண்மை பயக்கும் சமுதாயத்துக்கு.
-ஸக்கீனா.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து வகையான செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்கிறது.
-கீழை அப்பாஸ்.
பிஜேக்கு ஜாஹிர் ஹுஸைனின் அட்வைஸ் மிகவும் அருமை.
-அப்துல். (abdul_love@yahoo.com)
சகோதரர் முஹம்மது ரஃபீக் இப்போதும் ததஜவில் தான் இருக்கிறாரா? தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்போர் வேறு எந்த ஜமாஅத்துடனும் எந்த ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அத்தகையோர் தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தேவையில்லை என்றும் ததஜ அறிஞர் சம்சுல் லுஹா பேசியுள்ளார். எதற்கும் சகோதரரர் முஹம்மது ரஃபீக் இப்போதும் ததஜவில் தான் உள்ளீர்களா என்று தலைமையில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
ஏர்வாடி அப்துல்லாஹ், கட்டார்.
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்
நான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவன் எனினும் மார்க்கத்திற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை மனதாற பாராட்டத்தயங்க மாட்டேன் உஙகள் பனி சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உங்கள்,
முஹம்மது ரஃபீக்,
புனித மக்கா. செல்:00966556285134.
இணையதளம் பார்ப்பதற்கு மிக அருமை. ரெம்ப சூப்பர்.
-அப்பாஸ், கீழக்கரை.
தொண்டி பொய்யருக்கு கீழை ஜமில் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார் .இனியாவது தள்ளாடும் தவ்ஹித் ஜமாத்தினர் புரிந்து கொள்ளவேண்டும் .
-அதிரை ஹஸன்.
பீஜெயின் விமர்சனங்கள் உங்களை பாதிக்கூடாது. பீஜெக்கு பதில் என்பது சேற்றில் எரியும் கல்லைப்போன்றது.பிறரை இகழும் இயல்புடையோரை இஸ்லாம் நரகத்தின் அடித்தட்டிற்குரிய முனாபிக்குகள் என்கிறது. உங்களின் நேரங்களை பயனுள்ளதாக மாற்றுங்கள்.உங்களின் பணிகளை சுயபரிசோதனை செய்யுங்கலள்.அது உங்களின் குறைகளை களைய வழியாகும்.தன் பலம் அறியவும் வழி காட்டும்.அல்லாஹ் தனக்காக தாழ்த்திக்கொள்வோரை உயர்த்தி விடுகிறான்.
-மர்லியா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புச் சகோதரர் பாக்கர், உங்களது இணையதள பக்கம் கிடைக்கப் பெற்றேன். செய்திகள், விமர்சனங்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி. கவலையடையாதீர்கள், நம் இறைப்பணி தொடர இன்ஷா அல்லாஹ் வல்ல அல்லாஹ் உதவி புரிவான். நான் உங்கள் சகோதரனாக இருக்கின்றேன். உங்களுக்காகவும், ஐ.என்.டி.ஜேக்காகவும் மற்ற முஸ்லிம் சகோதரர்களுக்காகவும் துஆச் செய்கின்றேன்.
அன்புடன் சகோதரன்
கீழை அப்துல் ஹமீது
துபை.



இந்த ஆ(பிராஹிமின்) (Peace be upon him) சந்ததியினருக்கு வரலாற்றை திருத்தி எழுதுவதே முக்கிய நோக்கம். இவர்களின் ஒரு பிரிவினராகிய யூதர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் இஸ்லாமிய வரலாற்றை திருத்த முடியவில்லை.
மொகலாய மன்னர்களால் இந்துஸ்தான் என்று மிக அழகாக பெயர் சூட்டி மகிழ்ந்த இந்த மண்ணில் இந்த ஆ(பிராஹிமின்) (Peace be upon him) சந்ததியினர் தனது மனம் போன போக்கில் இஸ்லாமிய வரலாற்றை திருத்த முயல்கின்றனர். இந்த தினமலர் பத்திரிகை உண்மையின் உரை கல்லா? அல்லது பொய்களின் உறைவிடமா? கடந்த 07-12-2011 அன்றைய தேதி இட்ட தின மலர் நாளிதழில் முஹர்ரம் பற்றிய செய்தியில் இஸ்லாமியர்களின் உத்தம தூதர் முஹம்மது நபி (Peace be upon him) அவர்களின் அருமை மகளார் பாத்திமா அவர்கள், போரில் தனது மகன்களின் மரண செய்தி கேட்டு தீ குளித்ததின் நினைவாக இன்று ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தீ மிதி விழா நடத்துகின்றனர் என்று கட்டுக் கதை கட்டி பத்திரிகை உலகம் தனது கையில் இருக்கின்றது என்று தனது மனம்போன போக்கில் ஆடுகிறது. இஸ்லாம் என்பது புராண கால கதைகள் கொண்ட ஒரு சமயம் அல்ல. தனது இஷ்டம் போல் வளைப்பதற்கு. இஸ்லாம் இந்த பிரபஞ்சத்தின் வரலாற்றை, பெரு வெடிப்பின்(BIG BANG THEORY) ஆரம்பம் முதல் அழியும் கடைசி நாள் வரை மிக அழகாக கூறும் ஒரு மார்க்கம். இஸ்லாம் ஒரு வரலாறு. எங்கள் உத்தம தூதர் முஹம்மது நபி(Peace be upon him) அவர்களின் திருமகளார் அன்னை ஃபாத்திமா அவர்கள் தன் செல்வங்களான ஹஸன் மற்றும் ஹுசைன் இருவரும் இளம்பிராயத்தில் இருக்கும்போதே இறந்து விட்டார்கள். இதுதான் வரலாறு. தற்கொலை இஸ்லாத்தில் மிகக் கடுமையாக தடுக்கப்பட்ட ஒன்று. தற்கொலை செய்தவரின் உடலை எந்தவித சடங்கும் செய்யாமல் புதைத்துவிட வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்டம்.
இது தெரியாமல் தன் இஷ்டத்திற்கு வரலாற்றை திரித்து எழுதுவதை இந்த ஆ(பிராஹிமின்) (Peace be upon him) சந்ததியினர் கை விட வேண்டும். ஏற்கனவே திருவள்ளூர் அருகில் நடந்த குடும்ப சம்பவத்திற்கு அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்திய இந்த தின மலர் ஏடு, ஒரு படத்தை வரைந்து இதுதான் முஹம்மது நபி (Peace be upon him) என்று கொச்சைபடுத்திய இந்த தின மலர் ஏடு இப்போது இந்த துவேஷத் தவறையும் செய்திருக்கின்றது. எந்த ஒரு இஸ்லாமியனும் மற்ற சமயத்தவரின் தெய்வங்களை பழிப்பதில்லை. ஏன் என்றால் எங்கள் உத்தம தூதர் முகம்மது நபியின் (Peace be upon him) பொன்மொழியான "நீங்கள் மற்றவரின் தெய்வங்களை நிந்திக்காதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் அவர்கள் உங்கள் இறைவனை நிந்திப்பார்கள்" என்ற வழிகாட்டுதல் எங்களுக்கு உண்டு. ஆகவே இதுவே கடைசியாக இனி இஸ்லாம்பற்றிய எந்த ஒரு வரலாறும் எங்கள் தலைமை காஜியிடம் அனுமதி பெற்று வெளியிட்டால் நலம் என்று இந்த தின மலரை வெளியிடும் ஆ(பிராஹிமின்) (Peace be Upon Him) சந்ததியினருக்கு நான் அறிவுறுத்துகிறேன் . இஸ்லாமியர்களைப்பற்றிய செய்திகளுக்கு தடை இல்லை. ஆனால் இதுதான் இஸ்லாம் என்று இஸ்லாமிய வரலாற்றினை திருத்துவதை எந்த ஒரு இஸ்லாமியனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். "தெரிந்தே ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் தனது இனிஷியலுக்கு சொந்தக்காரன் அல்ல". இது எனது முப்பாட்டனார் எனக்கு இளம்பிராயத்தில் சொன்ன அறிவுரை. இதற்கு இன்றுவரை எனக்கு விடை தெரியவில்லை. ஆசிரியருக்கு தெரிந்தால் எனக்கு சொல்லவும். நன்றி.
ilayangudi meeting patri police il complaint panniya tntj nirvahi oru mana noyali
அன்பிற்கினிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களே!
டிசம்பர் 23 அன்று வெளிவரவிருக்கும் சீயான் விக்ரம் நடித்த இராஜபாட்டைப் படத்தில் முஸ்லீம் வில்லன் கேரக்டரும், வில்லனின் அடியாட்களாக முஸ்லீம்களுமான கேரக்டர்களாக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பார்க்க :www.youtube.com பிறகு Rajapattai official trailer என்று search செய்தால் அந்தப் படத்தின் டிரைலர் காட்டப்படும். அதில் 3 வேளை சோத்துக்கும், ஐந்துவேளை தொழுக்கைக்கும் உரிய சராசரி மனிதன் இல்லைடா! அவன் எமண்டா! என்று வில்லனின் தன்மையைக் கூறும் வசனும் இடம்பெற்றுள்ளது. ஹீரோ முஸ்லீம் அடியாட்களை அடித்து துவம்சம் செய்வதுபோன்றக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இதன் டைரக்டராக சுசீந்திரன் என்பவரும், புரொடியூசராக பிரசாத் வி. பொத்லூரி என்பவரும் இப்படத்தை தயாரித்துவருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தாங்களின் இயக்கத்தின் சார்பாக முறையான விளக்கம் கேட்டுக்கொண்டு அதை நீக்குமாறு கோரிக்கை வைக்கவும். இல்லையேல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம் இயக்கங்களின் சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேண்டுகோள் வைக்குமாறு உங்களின் சகோதரர்களாகிய ரியாஸ் அஹமது என்ற நானும், அமானுல்லாஹ் என்ற என் நண்பனும் கேட்டுக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்தினை இன்ஷா அல்லாஹ் எங்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கின்றோம்.
சகோதரர் ரியாஸ், இது ஒரு வியாபார டிரண்டாக இருக்கிறது. முஸ்லிம்களை இழிப்படுத்தி படம் எடுத்தால், அது விமர்சனமாகும், அதன் மூலம் ஓசி விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள் என கருதுகிறோம்.
வஸ்ஸலாம்.
அவருடன் கண்ணும் இமையும் போல் ஒட்டி உறவாடிய அத்தனை பேரும் விலகி விட்டார்கள். நேற்று வந்தவர்கள், முந்தாநாள் வந்தவர் என அவரைப் பற்றி தெரியாத சில சகோதரர்கள் ஒட்டி கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் அவருடன் ஒரு மாதம் இருந்தால், அவருடைய வண்டவாளம் தெளிவாக தெரிந்து, தானாக விலகி விடுவார்கள். என்று எழுதி உள்ளேரே.... எத்தனை பேர் எங்கே பொய் விட்டார்கள்... அவர்களும் அவருடன் ஒரு மாதம் இருந்தால், அவருடைய வண்டவாளம் தெளிவாக தெரிந்து, தானாக விலகி விடுவார்கள். .... என்று எழுதி உள்ளேரே.... உங்களை வெளி ஏற்றிய பிறகு தானே வெளியே வந்தீர்கள்... அதற்கு முந்தய காலம் முழுவதும் அண்ணன் உடன் தானே இருந்தீர்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே! நாங்கள் இவரது குணம் தெரிந்து தானாக ஒதுங்கிக் கொண்டோம். இதை திருச்சியில் நடைபெற்ற நிர்வாகக்குழுக்கு பிறகு, அடிப்படை உறுப்பினராக மட்டும் ததஜவில் இருந்து கொள்வோம் என்றும் எந்த ஒரு பொறுப்பிலும் நாம் இனி பங்கெடுப்பதில்லை எனவும் தீர்மானித்து இருந்தோம். அப்போதே விலகி இருந்தால், பிஜெயை விமர்சிப்பதற்காக பதிலாக தவ்ஹீத் கொள்கையை அல்லவா சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் விமர்சிப்பார்கள் என நினைத்து அமைதி காத்தோம்.
ஆனால், அது அவருக்கு சாதகமாக போய் முடிந்து விட்டது. எனவே நாங்கள் விலக்கப்பட்டதுபோல் காட்சியளிக்கப்பட்டோம். உண்மையை அறிந்தவன் ஏக இறைவன். அவன் நாளைய மறுமையில் இதற்கான பதிலை தருவான்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
அன்பு இஸ்லாமிய சஹோதரர்களே,
இங்கு நான் உங்களிடம் குறிப்பிட விரும்புவது நாம் எல்லாம் ஒரே கொள்கை சஹோதரர்கள்.எதற்காக தனி நபர்களை பற்றி இவ்வளவு விமர்சனங்கள்?..மாற்று கொள்கை உடையவர்கள் இவற்றையெல்லாம் பார்த்து பாருங்கடா தௌஹீது வாதிகளை ....என்று கிண்டல் பண்ணுகிறார்கள்,,,கைதட்டி சிரிக்கிறார்கள்..மிக மன வேதனையாக இருக்கிறது.நான் பீஜே பக்கமோ அல்லது உங்கள் பக்கமோ சார்பாக பேசவில்லை.
இப்படி உலகம் எல்லாம் பார்க்கும் அளவுக்கு ஒருவரையொருவர் இவ்வளவு தாக்கி பேசுகிறீர்களே மாற்று மத மக்களுக்கு எப்படி இஸ்லாத்தை பற்றி சொல்வது?நீங்கள் எல்லோரும் மார்க்கத்தை நன்கு அறிந்தவர்கள்..அல்லாஹ் அனுமதித்த முறையில் உங்களுக்கிடையில் அழகிய முறையில் விவாதம் மற்றும் பேச்சுக்கள் மூலம் உங்களுக்கிடையில் உள்ள கசப்புக்களை சரி செய்து கொள்ளலாமே!..சரி பீஜேதான் உங்களை தவறாக சொன்னார் என்றால் நீங்களாவது அல்லாஹ்வுக்காக மற்றும் ஏகத்துவ எழுச்சியை கருத்திற்கொண்டு பகிரங்கமாக விமர்சனங்களை தவிர்க்கலாமே!..அல்லாஹ் உங்களுடைய பொறுமைக்கும் தூய நோக்கத்திற்கும் மறுமையில் நட்கூலியைத்தருவான்...அன்பின் சஹோதரர்களே மீண்டும் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
அல்லாஹ்வுக்காக இவற்றையெல்லாம் விட்டு விட்டு தூய மார்க்கத்தை மட்டும் போதிக்கும் விடயங்களை எடுத்துச்செல்லுங்கள்.
அன்புடன் இஸ்லாமிய சஹோதரன்.
இல்முதீன் அல் ஜுபைல் சவுதி அரேபியா.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
சகோதரர் இல்முதீன் அவர்களுக்கு அல்லாஹ் மிக சிறந்த கூலியினை இம்மையிலும் மறுமையிலும் வழங்கட்டுமாக!
தாங்களின் கண்ணியமான அருமையான அறவுரைக்கு மிக்க நன்றி.
வஸ்ஸலாம்.
as.alkm.insha allah edirvarum ramadhan madaththai munnittu Colombo 09 masjid thowheed dahwa kuzhu pala sirappu nigalchigalai etpathu seythullathu.ramalan madham muluwathum iravuth tholugaiyay thodarnthu ilangayin munnani thowheed ulamakkalin thodar sotpolivugal nadaiperum.moulavigalana Rizwan firowsi,arham,naufar gafoori,imtiaz salafi aagiyor thodar sotpolivatra ullanar.melum thalamai yil thinamum ifthar etpadum seyyappattullana......sharaf colombo 02
Assalamualaikkum(varahmathullah),
Mohamed ali zinna, vadalurilirinthu ethai ezhuthugiren, nam jamathinar anaivarukkum ennudaya salam. En thanthai J. ABDUL RAHEEM avarkal kadantha sanikilamai mathiam 12.15ku vafathanaarkal enbathai varuthathudan therivithu kolkiren, Inna lillahi va inna Ilaihi Rajuhun, avarkalukkaaga nam sagotharargal anaivarum avarkuladiya marumaiyin vetrikkaga Dua seyyumbadi anbudan kettukolkiren. Assalamualaikkum.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முஹம்மது அலி ஜின்னா, வடலூரிலிருந்து எழுதுகிறேன். நம் ஜமாஅத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஸலாம்.
என் தந்தை J.அப்துர் ரஹீம் அவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் 12.15க்கு வஃபாத்தானார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களுக்காக நம் சகோதரர்கள் அனைவரும் அவர்களுடைய மறுமையின் வெற்றிகாக துஆச் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
எங்கள் அன்புக்குரிய சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு, தந்தையை இழந்து நிற்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் அல்லாஹ் நல்லருள் புரியட்டும். அழகிய பொறுமையை நல்கட்டும்.
உங்களின் தந்தை அப்துர் ரஹீம் அவர்களின் கப்று வேதனையை நீக்கி, மறுமை வெற்றியடைய நம் சகோதரர்கள் அனைவரும் சார்பாக நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துஆச் செய்கின்றது.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரரே . தங்கள் களத்தில் கட் காபி செய்து சில செய்திகளை பதியலாம் . ஆனால் இதை தங்கள் எங்கிருந்து காபி செய்தீர்களோ அந்த இணைய தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டு இருக்கலாம் . உதரணமாக செங்கிஸ்கான் இணைய தளத்தில் கடந்த 17 அன்று பதியப்பட்ட பதிப்புகள் அனைத்துமே வேறு தளத்தில் இருந்து காபி செய்யப்பட்டது தானே. பிரபல தமிழ் இஸ்லாமிய ஆதரவு தளத்தில் இறுதி காபி செய்யப்பட்டது தானே . கொஞ்சமாவது பத்திரிகை தர்மத்தை கடைபிடியுங்கள் . எதோ உங்கள் சொந்த பதிவு போன்றே பதிவு செய்கிறீர்களே ...?????
-இம்ரான்தீன்.
வ அலைக்கும் வஸ்ஸலாம்.
சகோதரர் இம்ரான்தீன்,
உங்கள் கருத்துக் நன்றி. நாம் எங்கிருந்து செய்தியினை எடுக்கின்றோமோ அந்த தளத்தின் பெயருடன்தான் வெளியிடுவோம். நமது வாசகர்கள் யாராவது எங்கிருந்து செய்தி எடுக்கிறார்கள் என எங்களுக்கு தெரியாது. ஆனால் அவர்கள் பெயருடன்தான் வெளியிடுகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதரர்களே! இந்த ஆண்டு +2 தேர்வில் 1135 மதிப்பெண் பெற்ற அப்துல் அஜீஸ் என்ற சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவன் மேற்படிப்பு படிக்க வசதியற்ற நிலையில் உள்ளார். IAS ஆக வேண்டும் என்ற கனவில் உள்ள இந்த மாணவனின் கல்வி செலவுக்கு உதவுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம். மாணவனின் தாயார் அவர்களை 8428678502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
D.மக்பூப்
d.mehboob@gmail.com
வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்புக்குரிய சகோதரரே!
தாங்கள் எங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை (9941828477, 9600191610) இந்த நம்பரில் தொடர்பு கொண்டால் தாங்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.
வஸ்ஸலாம்.
தொடர்ந்து சீண்டும் தினமலர்,
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நமது இஸ்லாமிய சமுதாயத்தை சீண்டிப்பார்க்கும் செயலை தனது தார்மீக கொள்கையாக கொண்டிருக்கும் காவி நாழிதளான தினமலரில், மார்ச் 11 வெள்ளியன்று வெளியான டவுட் தனபாலு என்ற தலைப்பில் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவு தலைவரான சகோதரி ஃபாத்திமா முஸாஃப்பர் கொடுத்த பேட்டியை விமர்சிக்கும் வண்ணம் நஞ்சு கலந்த வார்த்தைகளால் நம்மை வசைபாடியதை நீங்களே பாருங்கள்.
நமக்கு ஒற்றுமை இல்லை என்பதை விமர்ச்சித்து, சீட் கொடுத்தால் வென்றுவிடுவீர்களோ? என்று நக்கலாய் கேட்பதோடு மட்டுமல்லாமல், உங்களால் எதும் முடியாது தி.மு.கவை நாடித்தான் பிழைப்பை ஓட்டவேண்டும் என்று எள்ளி நகை ஆடி உள்ளான். நம்மை இவன் இப்படி சீண்டி பார்ப்பது முதல் முறை அல்ல. நம் உயிரிலும் மேலான உன்னத தூதரை விமச்சித்தபோதே நாம் விடை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நமது அலட்சியத்தை அறிந்த அவன் இப்போது நம்மை நேரடியாக நச்சு வார்த்தைகளால் நகையாடியுள்ளான். இனியும் அமைதிகாத்தால் நம்மை விட வெட்கம் கெட்ட ஜென்மத்தை உலகில் கான முடியாது, இந்த வெட்கம் கெட்ட இயக்க ஜென்மங்கள் விளங்கினால், இந்த தேர்தலில் இணைந்து செயல்பட்டு வெற்றியை சுவைத்து பிறகு அந்த மானம் கெட்ட காவி கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! இன்ஷாஅல்லாஹ் இல்லை என்றால் இன்னும் இழிவு படுத்துவான்.
இஸ்லாமிய சமுதாயமே காத்திரு! வெட்கக்கேடை வரவேற்க்க! கதவை தட்டி காத்துகிடந்தது போதும் அடைத்து கிடக்கும் கதவை உடைத்து திறக்க உடனே புறப்படு! காற்றாய் இருந்து காத்துக் கிடந்தது போதும் புயலென வீசி புழுதியை விறட்ட புறப்படு!
வேங்கை ரிஸ்வான்.
Post new comment