.jpg)
அல்லாஹ்வின் அருளால் கடந்த 25.10.2009 கீழக்கரையில் குழந்தை நல மருத்துவ முகாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. அதன் மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ் தலைமை தாங்க, மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் உட்பட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கிய இந்த முகாமை இதஜவின் மாநிலச் செயலாளர்கள் செங்கிஸ்கான் மற்றும் கலிமுல்லாஹ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் ஜவாஹிர் ஹுஸைன் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் மிகச் சிறப்பாக சேவையாற்றினர். குழந்தை நல மருத்துவம் என்றதும், தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை காட்டினர். இதில் 125 குழந்தைகள் பயன்பட்டனர். 12 ஆயிரம் ரூபாய்க்கான குழந்தைக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை நகரத்தலைவர் கண்மணி சீனி தலைமையில் ஹாஜா, நியாஸ், ஹாஜா அணீஸ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மருத்துவ முகாம் நடத்த கீழக்கரை வடக்குத் தெரு ஜமாஅத்தினர் இடம் கொடு்த்தனர். இந்த மருத்துவ முகாமிற்கான போஸ்டர் மற்றும் மருந்துகளை கீழக்கரை அஞ்சல் மாத இதழ் சார்பாக வழங்கப்பட்டது.


